உசிலம்பட்டி, ஆக.12- உலக அளவில் நடைபெற்ற உயரம் குறைந்தோருக்கான தடகளப் போட்டி ஜெர்மனியில் நடை பெற்றது. இதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கணே சன் (42) வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் (பிரிவு-iii) மூன்று தங்கப் பதக்கங்களை வென்று மதுரைக்கும், தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்துள்ளார். பதக்கங்கள் வென்ற மதுரை வந்த கணேசன் தீக்கதிர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,”முதன் முதலில் 2015 முதல் மதுரை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றேன். தொடர்ந்து தேசிய அளவில் 2015இல் வட்டு எறிதலில் தங்கம், குண்டு எறிதலில் வெள்ளி, 4x4 தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று, கடந்த 2017இல் கனடா நாட்டில் நடை பெற்ற போட்டியில் பங்கேற்று மூன்று தங்கப்பதக்கம் வென்றேன். எனது சாதனையைப் பாராட்டி அப்போ தைய முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி ரூ.15 லட்சம் பரிசளித்துப் பாராட் டினார். தொடர்ந்து 2018இல் இலங்கை, தாய்லாந்து நாடுகளில் நடைபெற்ற போட்டியில் பங்கேற் றேன். 2019இல் பாரீஸ், மொராக்கோ, ஷார்ஜா, துபாய் ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ள போட்டிகளிலும் பங்கேற்றுள்ளேன். பொதுவாகப் போட்டியில் பங்கேற்றுவிட்டு திரும்பு வதற்கு குறைந்தது ரூ.2.50 லட்சம் செலவாகும். இந்த முறை செல வில்லாமல் பங்கேற்று சாதனை படைத்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளேன். செலவில்லாமல் சென்றதற்கு காரணம் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான்.
தற்போது நிறைவு பெற்ற ஜெர்மனி தொடரில் இந்தியாவிலி ருந்து மொத்தம் 28 பேர் பங்கேற் றோம். இதில் தமிழகத்திலிருந்து ஏழு பேர். ஏழு பேருக்கான செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றது பெருமைக் குரியது. எனது பயிற்சிக் களம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் தான். எனக்கு வழிகாட்டியாக இருப்பது எனது பயிற்சியாளர் மதுரையைச் சேர்ந்த ரஞ்சித் ஆவார். போட்டி இல்லாத நாட்களில் வாரத்தில் மூன்று நாள் மதுரைக்கு வந்து பயிற்சி மேற்கொள்வேன். போட்டிகள் நெருங்கும் சூழல் ஒரு மாதம் வரை கூட தினமும் வந்து பயிற்சி மேற் கொள்வேன். எனது மனைவி சுவித்ரா தையல் தொழிலாளியாக உள்ளார். எனது மகள் யாஷிகா 10-ஆம் வகுப் பும், ஜனஸ்ரீ 7-ஆம் வகுப்பும் படிக் கின்றனர். இருவரும் உசிலம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் தான் படிக்கின்றனர். விளையாட்டில் சாதனை படைக்கும் எங்களுக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும். என்னைப் போன்றவர்கள் மதுரை க்கு வந்து செல்வது மற்றும் இதர செலவினங்களுக்காக மாதம் தோறும் குறைந்தது ரூ. 3ஆயிரம் செலவா கிறது. விளையாட்டிற்காக செலவா கும் இந்தத் தொகையை விளை யாட்டு அமைச்சகம் ஏற்கவேண்டும். நகர்ப் பேருந்துகளில் மட்டுமே எங்களுக்கு சலுகை அளிக்கப்படு கிறது. வெளியூர்ப் பேருந்துகளில் எங்களுக்கு சலுகை அளித்தால் விளையாட்டுப் பயிற்சிகளுக்கு மாநிலம் முழுவதும் சென்று வரு வதற்கு வசதியாக இருக்குமென்றார்.எதிர்காலத்தில் பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று மதுரைக்கும், தமிழ கத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தருவதே தனது லட்சியம் என்று கணேசன் கம்பீரமாக கூறினார்.
ச.நல்லேந்திரன்