tamilnadu

img

முதல் தலைமுறை தலைவர்களின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்!

சென்னை, டிச. 26 - முதல் தலைமுறைத் தலைவர்களின் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபடு வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சூளுரைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம், தோழர் கே.டி.கே.தங்க மணியின் நினைவு தினம், ‘தகைசால் தமிழர்’ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 99ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி செவ்வாயன்று சென்னையில் பாலன் இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று ஜி.ராம கிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்க ராஜன் ஆகியோர் ஆர்.நல்லகண்ணு விற்கு ஆடை அணிவித்து வாழ்த்து தெரி வித்தனர். அப்போது ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைமுறை தலைவர்களில் ஒருவர் ஆர்.நல்லகண்ணு. நம்மோடு அவர் வாழ்ந்து கொண்டிருப்பதே உற்சாகமளிக்கிறது. ஏ.நல்லசிவன், பி.மாணிக்கம், என்.சங்க ரய்யா, ஆர்.நல்லகண்ணு போன்ற மகத் தான தலைவர்களை நெல்லை மண், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அளித்துள் ளது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தில், அரசியல் சுதந்திரத்தோடு, சாதிபேதமற்ற சமூக விடுதலை, பொருளாதார விடுதலை  என பூரண சுதந்திரத்தை முதல் தலை முறை கம்யூனிஸ்ட் தலைவர்கள் கோரினர். தற்போதுள்ள ஒன்றிய பாஜக ஆட்சியில்,  சுதந்திரமே ஆபத்திற்குள்ளாகி உள்ளது. அரசியல் சட்ட விழுமியங்கள் தகர்க்கப்படுகின்றன. பாஜகவின் அடக்குமுறையை முறி யடித்து, ஆர்.நல்லகண்ணு போன்ற முதல் தலைமுறை தலைவர்களின் லட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்

வழிகாட்டி

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., பேசுகையில், “அரசியல் வாழ்வின் வழிகாட்டியாக தோழர் ஆர்.நல்லகண்ணு உள்ளார் என்றார். 1972ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அரசிய லமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்பு களை மாற்றக் கூடாது என்று தீர்ப்பளித்தது. அதனை மாற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் பேசுகிற அபாயம் உள்ளது. ஒன்றிய பாஜக அரசு வீழ்த்தப்பட்டு மதச்சார்பற்ற அரசு அமைவதை நல்லகண்ணு காண்பதோடு, அந்த விழாவில் பங்கேற்க வேண்டும். நூற்றாண்டிலும் வந்து அவரை வாழ்த்து வோம்” என்றார்.

தேசிய பேரிடர்

தோழர் ஆர்.நல்லகண்ணு பேசுகை யில், தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிப்பதோடு, மாநில அரசு கோருகிற நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில துணைச் செயலா ளர் நா.பெரியசாமி, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாச்சலம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.மூர்த்தி, வகிதா நிஜாம் உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “99ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்! ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு அவர்கள், நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தோழர் நல்லகண்ணுவுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட தலைவர்கள் நேரிலும், பல்வேறு கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.