ஜூன் 24-இல் சிறப்பு முகாம் மூன்றாம் பாலினத்தவர்க்கு அழைப்பு அரியலூர்,
ஜூன் 4 - அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜூன் 24 ஆம் தேதி அனைத்து திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்த வர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில், அடை யாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய வற்றை வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே திரு நங்கை, திருநம்பி, இடை பாலினத்தவர்கள் அனை வரும் விவரங்களை பதிவு செய்து பயன்பெற லாம் என ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்து உள்ளார்.
பள்ளி வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூர், ஜூன் 4 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) காளீஸ் வரி தலைமை வகித்தார். பேரூராட்சி பெருந்தலை வர் சாந்தி சேகர், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார், பள்ளி ஆசிரி யர்கள், பெற்றோர்களி டம் பள்ளி வளர்ச்சி, மாணவிகள் உயர் மதிப் பெண் பெறுவது தொ டர்பாக கோரிக்கைகளை கேட்டறிந்து, ஆலோ சனை வழங்கிப் பேசி னார். ஓய்வு தலைமை ஆசிரியர் குலாம் கனி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரி யர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் மூவ ருக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3 ஆயிரத்தை தனது சொந்தப் பணத் தில் இருந்து ஊக்கப் பரிசாக வழங்கினார்.