பனை மேம்பாட்டு இயக்கத்தில், பனை சாகு படியை ஊக்குவிக்க விவசாயிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ஆற்றங்கரைகள் போன்ற பொது இடங்களில் நடவு செய்ய 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும். கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் குறுகிய காலப் பனை ரகங்களை உருவாக்குதல், மதிப்புக்கூட்டுதல் தொடர் ்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மேலும் முக்கியத்து வம் அளித்து பனைக்கென தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.
பூங்கா சீரமைக்க ரூ.5 கோடி
கோவை மாநகரத்தில் புகழ்பெற்றுத் திகழ்வது பல்கலைக்கழகத்தின் தாவரவி யல் பூங்கா. முகலாய தோட்டம், ஜப்பானிய தோட்டம், கருங்கல் தோட்டம், தாவர வடிவ மைப்பு, கிளைவிட்ட பனைமரம் என்று பலவிதமான அம்சங்களைக் கொண்ட இந்த பூங்கா மலர்களைப் பற்றியும், அலங்கார செடிகளைப் பற்றியும் மாணவர்கள் அறிந்து கொள்ளவது மிகவும் உதவியாக இருக்கும். இதில் அரிதான, அழிவின் விளிம்பில் உள்ள தாவர பல்லுயிர் செல்வத்தை மேம்படுத்த வும், பல்வகை சிறப்பு வாய்ந்த பூங்காக் களை நிறுவவும், தொழில் முனைவோர் பயிற்சிகளை அளிக்கவும் உதவியாக ரூ. 5 கோடியில் சீரமைக்கப்படும். பூச்சிகள் அருங்காட்சியகம் பூச்சிகளே உலகில் அதிகமாக இருக்கும் உயிரினங்கள். இன்னும் சொல்லப்போனால் பூச்சிகள் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பூச்சிகள் இல்லாத உலகத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. பட்டாம் பூச்சிகளின் சிறகசைத் தலும், தேனீக்களின் ரீங்காரமும், வண்டு களின் ஓசையும் இல்லாத உலகம் வெறுமை யாகக் காட்சியளிக்கும். கோவை வேளாண் மைப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பல்வேறு விதமான பூச்சிகள் சேகரிக் கப்பட்டு, அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மையத்தை மெருகேற்றவும், மேம்படுத்த வும், மேலும் கட்டமைப்புகளை உருவாக்க வும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்
செஞ்சி, திருவெண்ணைநல்லூர், பாபநாசம், நாயுடுமங்கலம், ஆதமங் கலம்புதூர், வேப்பூர் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் பரிவர்த் தனைக் கூடங்கள், உலர் களங்கள், சேமிப்புக் கிடங்குகள் போன்ற வசதிகள் அமைக்கப்படும். சங்ககிரி, காடையாம் பட்டி, ராசிபுரம், நாமக்கல் ஆகிய இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு புதிய கட்டமைப்பு வசதிகள், சிவகிரி, புஞ்சை காளமங்கலம், எழுமாத்தூர், மலை யடி பாளையம், நெகமம், காரமடை, ஆனை மலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கூடுதல் சேமிப்புக் கிடங்கு கள் ரூ. 36 கோடியில் அமைக்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 27 சேமிப்புக் கிடங்குகளில் 34,000 மெட்ரிக் டன் கொள்ளளவு ஏற்படும் வகையில், வரும் ஆண்டில் ரூ. 54 கோடி யில் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்படும்.
முந்திரி சாகுபடி மேம்பாடு
முந்திரிக்கான சந்தை வாய்ப்பு உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடு களிலும் அதிகரித்து வரும் நிலையில், வரும் ஆண்டு முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 ஹெக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த, விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 ஹெக்டரில் நடவுசெய்து புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்ருட்டி, அருகாமையிலுள்ள பகுதி களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
புவிசார் குறியீடு பெறுதல்
ஒவ்வொரு மண்ணுக்கும், ஒவ்வொரு மகத்துவம் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கே உரிய வேளாண் பொருட்கள் எண்ணற் றவை இருக்கின்றன. ஒரு மாவட்டத்தில் விளைகிற மாதிரி, மற்றொரு மாவட்டத்தில் அவை விளைவது இல்லை. அத்தகைய சிறப்பு வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று உலகளாவிய சந்தையில் இடம்பெறச் செய்வதன்மூலம் அவற்றின் மதிப்பு அதிகரிக்கிறது. கடந்த ஆண்டில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வரும் ஆண்டிலும், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புகவுணி அரிசி ஆகிய பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற திட்டமிடப்பட்டுள்ளது.
பருத்தி இயக்கம்
நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்து வழங்கிடும் வகையில், தொடர்ந்து பருத்திப் பயிரின் உற்பத்தியை உயர்த்திட, “நீடித்த நிலையான பருத்தி இயக்கத் தினைச்” செயல்படுத்தி வருகிறது. வரும் ஆண்டிலும் பருத்தி உற்பத்தியை 4 லட்சத்து 52 ஆயிரம் பேல்களாக உயர்த்தும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்
வரும் ஆண்டில், முதல் கட்டமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல் படுத்தப்பட்டு வரும் 2,504 கிராம ஊராட்சி களில், வேளாண் முன்னேற்றக் குழுக்கள் இரண்டு கோடியே ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டு, செயல்படுவதற்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.