tamilnadu

img

விதைக்கப்பட்ட தியாகிகள் இரணியன், சிவராமன், ஆறுமுகம்

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியாளர்க ளால் 1948முதல் 51 வரை தடை செய் யப்பட்டது. கட்சி மற்றும் விவசாயிகள் சங்க முன் னணி ஊழியர்கள் ஆட்சியாளர்களால் வேட்டை யாடப்பட்டனர். அவர்களது குடும்பங்களும் அழிக்கப்பட்டன. நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகளைப் பாதுகாக்க காங்கிரஸ் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. இந்த அடக்குமுறை காலத்தில் ஏராளமான இளைஞர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணை ந்து தீரமுடன் போராடினர். சாம்பவானோடை சிவ ராமன், இரணியன் ஆகியோர் மலேயாவிலி ருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு வந்த வர்கள். இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோரும் நிலவுடைமை மற்றும் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்றவர்கள். 50 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கும் அதிகமாக வைத்திருந்த நெடும்பலம் சாமியப்ப முதலி யாருக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்குத் தலைமையேற்ற சிவராமன், தலைமறைவாக இருந்து விவசாயிகளை அணிதிரட்டினார். பட்டுக்கோட்டை வட்டம் நாட்டுச்சாலை கிரா மத்தில் 1950ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி சிவராமன் சுட்டுக்கொல்லப்பட்டார். மலேயாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு தனது சொந்த ஊரான வாட்டாகுடியில் தங்கியிருந்த இரணியன் அந்த ஊரில் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கினார்.

அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய மதுக்கூர், பாப்பா நாடு, அத்திவெட்டி ஜமீன்களின் கொடுமைகளை எதிர்த்து மக்களை அணிதிரட்டினார். நாடிமுத்துப்பிள்ளைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை எஸ்டேட்டில் பணி யாற்றிய விவசாயத் தொழிலாளர்கள் கடுமை யாகச் சுரண்டப்பட்டனர். அவர்களையும் இரணி யன் அணிதிரட்டினார். தோழர் கே.பி. நடராஜன் போன்ற தலைவர்க ளின் வழி காட்டுதலுடன் செயல்பட்ட இரணியன், செம்பாலூர் பண்ணைக்கெதிரான போராட் டத்தை ஆம்பலாப்பட்டு, கரம்பயம், எட்டுப் புலிக்காடு ஆகிய கிராமங்களில் உள்ள கம்யூ னிஸ்ட்டுகளையும் இணைத்துத் தலைமை யேற்று நடத்தினார். இரணியன் அந்தப் பகுதி நிலவுடைமையாளர்களுக்கும் காவல்துறையின ருக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார். போலீசாரால் தேடப்பட்டு வந்த இரணியன் ஒரத்த நாடு வட்டம் வடசேரியில் கயவன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். 1943இல் ஆம்பலாப்பட்டில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டது. புண்ணியம் கதிரேசன் தலைமையில்  இளைஞரான ஆறுமுகம் தன் னையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டார். ஆம்பலாப்பட்டு, மதுக்கூர் ஜமீனுக்கு உட்பட்ட கிராமமாகும். ஆம்பலாப்பட்டு முதல் வெண்குழி வரையிலான மதுக்கூர் ஜமீன்தாருக்குச் சொந்த மான 12 கிராமங்களில் நிலவிய நிலவுடைமைக் கொடுமைகளை எதிர்த்து ஆறுமுகம் போராடி னார். விவசாயிகளை மிரட்ட பயன்படுத்தப்பட்ட ஜமீனின் பிராமிசேரி நோட்டுகளை தீவைத்துக் கொளுத்தும் போராட்டத்தில் முன்னணியாக இருந்தவர் ஆறுமுகம். வடசேரி கிராம சவுக்குத் தோப்பில் இரணிய னும், ஆறுமுகமும் சந்தித்து விவாதித்த போது துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு ஆறுமுக மும், இரணியனும் போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். 1950ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் நாள் படுகொலை செய்யப்பட்ட சிவராமன், இரணி யன், ஆறுமுகம் ஆகியோரின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்து மறு நாள்பட்டுக்கோட்டை ரயில்வே கேட் அருகிலுள்ள மைதானத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். அந்த தியாகிகள் விதைக் கப்பட்டு 74 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் அவர்களது தியாகம் இன்றும் ஜொலிக்கிறது.  பெரணமல்லூர் சேகரன்