சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் அஞ்சலக இயக்குநர் உறுதி
மதுரை, பிப்.9- அஞ்சல் பணி நியமனங்களில் தமிழ் தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் இத்தேர்வுக்கு விண்ணப் பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் படும் என்றும் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனி டம் அஞ்சலக இயக்குநர் உறுதி யளித்தார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கிராமின் டாக் சேவக் (GDS) காலி யிடங்களுக்கு ஜனவரி 27 முதல் ஆன் லைன் விண்ணப்பங்கள் அனுப்ப லாம் என்றாலும் அதைச் செய்ய முடி யாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறைமையில் 10 ஆம் வகுப்பு தேறிய தேர்வர்கள் தவித்து வருகி றார்கள். இந்தியா முழுவதும் 40 ஆயிரம் கிராமின் டாக் சேவக் (GDS) காலி யிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள் ளது. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் 3167. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நிய மனங்களுக்கான ஆன்லைன் விண் ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப் பெண்கள் பாட வாரியாக கேட்கப் பட்டுள்ளது. மாநில பாட முறை யில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறி வியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால் ஆன் லைன் விண்ணப்பத்தில் 6 ஆவது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது “தெரிவு மொழி” என்பது. மற்ற மாநி லங்களில் இது இருக்கிறது. ஆகை யால் பிற மாநில தேர்வர்களுக்கு பிரச்சனை இல்லை. 6 ஆவது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடை முறையில் உள்ள தமிழ்நாடு தேர் வர்கள் பாட விவரங்களை நிரப்பா விட்டால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆன்லைன் முறைமை விட வில்லை.
நான் அஞ்சல் துறை செயலா ளர் வினீத் பாண்டே, தமிழ்நாடு தலை மைப் பொது மேலாளர் பி.செல்வக் குமார் ஆகியோருக்கு இது குறித்து கடிதங்களை எழுதியிருந்தேன். பிப்ரவரி 8 புதனன்று என்னிடம் அலை பேசியில் தொடர்பு கொண்டு பேசிய அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குநர் ராசி சர்மா, இப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும், 6 ஆவதாக உள்ள “தெரிவு மொழி” பகுதி தமிழ்நாடு தேர்வர் களுக்கு தடையாக இல்லாத வகை யில் மாற்றப்படும் என்றும், விண் ணப்பிக்க கடைசி தேதி மூன்று நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு தேர் வர்கள் தீர்வைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயன்பெறு மாறு வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.