சமீபத்தில் அமெரிக்கா நியூ ஆர்லி யன்ஸில் நடந்த பன்னாட்டு புவி இயற்பியல் மாநாட்டில் (Geo physical conference) அண்டார்டிகாவில் துவைட்ஸ் பனிப்பாறையை (Thwaites glacier) உருகுதலில் இருந்து தடுத்து நிறுத்தும் லார்சன் பி பனிப்படலம் ( Larsen B ice shelf) வரும் ஐந்து முதல் பத்தாண்டுகளுக்குள் உடைந்து காணாமல் போய்விடும் என்பதே முக்கியச்செய்தியாகப் பேசப் பட்டது. இது உலகளாவிய ரீதியில் தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். இப்பனிப்பாறையை ஆராயும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானி களே இந்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 5000 கோடி டன் பனிக்கட்டி கள் இந்த பனிப்பாறையில் இருந்து கழன்று உருகிக் கடலுடன் கலக்கிறது. இன்றுள்ள நிலை யில் இது தீவிர கடல்நீர் மட்ட உயர்விற்கு வழிவகுக்க வில்லை. என்றாலும் இது உலக கடல்களில் 4 சதவீத நீர்மட்ட உயர்விற்குக் காரணமாகவுள்ளது. துவைட்ஸ் பனிப்படலத்தில் கணக்கிட இயலா அளவு பனிக்கட்டிகள் சேகரித்து வைக்கப்பட்டுள் ளன. இவை எல்லாம் உருகினால் கடல்நீர்மட்ட உயர்விற்கு அது காரணமாகும். இது உலகளவில் பெரும் சூழல் சீரழிவை ஏற்படுத்தும். இதனால் இப்பனிப்பாறைப் பரப்பு உலகின் இறுதிநாளுக் குரிய அடையாளம் என்ற பொருள்படும் வகையில் டூம்ஸ் டே க்ளாக் (doom’s day clock) என்று அழைக்கப்படுகிறது.
இது உலகில் அளவில் மிகப்பெரிய பனிப்பாறை. இருபதாண்டுகளுக்கு முன் இதன் நீர்ப்பரப்பு 500 பில்லியன் டன். ஒவ்வொருமுறை இது உருகும்போது ஆயிரக்கணக்கான பனிப் பாறைத் துண்டுகள் அண்டார்டிகாவில் உள்ள வெடீல் கடலில் (Wedeell Sea) கரைகிறது. ஆபத்தான இது அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் உள்கடலிற்கு அருகில் அமைந்துள்ளது. இது தகர்ந்தால் அது அண்டார்டிகாவில் உள்ள மற்ற பனிப்பாறைகளின் அழிவிற்கு வழிவகுக்கும். இவ்வாறு நிகழ்ந்தால் அரை முதல் அதற்கும் கூடுதலான அளவு கடல்நீர் மட்டம் உயரும். இது உலகில் துறைமுகங்கள், கடலோரப் பகுதிகளை பெரிதும் பாதிக்கும்.
தப்புக் கணக்கு
இந்த பாறையில் தீவிர மாற்றங்கள் இந்நூற் றாண்டிற்குள் நிகழாது என்று கருதப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பிரபல சூழல் நிபுணர் மற்றும் சர்வதேச துவைட்ஸ் பனிப்பாறை ஆய்வுக்குழுவின் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டெட் ஸ்டாம்போஸ் இது குறித்து முன்னெச்சரிக்கை செய்துள்ளார். இதன் பரப்பு பிரிட்டன்/புளோரிடா அளவிற்கு உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்குள் இது உருகும் வேகம் இருமடங்கிற்கும் கூடுதலாகி யுள்ளது. இது உருகுவதைத் தடுக்கும்விதத்தில் ஒரு தடுப்பணை போல் 1255 சதுர மைல்/3250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள லார்சன் பி பனிப்படலத்திற்கு அடியில் சூடான கடல்நீர் பெருக்கெடுத்து வருவதால் டுவைட்ஸ் தொடர்ந்து உருகுகிறது. தடுப்பணையை சூடான நீர்வரத்து தொடர்ந்தும் பலவீனமாக்குகிறது என்று விஞ்ஞா னிகள் கூறுகின்றனர். இதன் கிழக்குப்பகுதி எப்போது வேண்டுமானாலும் உடையும் ஆபத்து உள்ளது.
லார்சன் பனிப்படலத்தின் 200 மீட்டர் அடர்த்தியுள்ள பனிக்கட்டிகள் ஒரு மாதத்திற்குள் உருகும் என்று ஆய்வாளர்கள் கற்பனை கூட செய்யவில்லை. ஒரு சுவர் உடைந்து செங்கற்கள் தனித்தனியாக பிளந்து விழுவது போல பனிப் பாறையில் இருந்து பனிக்கட்டிகள் உருகும் அதே வேகத்தில் முதன்மைப் பாறையில் இருந்து கழன்று சென்றுகொண்டிருப்பது ஆய்வாளர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துவைட்ஸ் பனிப்பாறையின் மேல் மற்றும் கீழ்ப்பகுதிகளில் விரிசல்களும், பிளவுகளும் ஏற் பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். லார்சன் பனிப்படலத்தை விட துவைட்ஸ் 100 மடங்கு பெரியது. 1990களில் டுவைட்ஸ் உருகி யதை விட இப்போது வேகமாக உருகுவது ஆய்வா ளர்களிடையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அண்டார்டிகாவின் தென்பகுதி சூடாகிக் கொண்டி ருப்பதால் துவைட்ஸ் தவிர மற்ற பல பனிப்பாறை களும் வேகமாக மெலிகின்றன. ஆனால் இதுநாள் வரை இவற்றை ஒரு கார்க் மூடி போல தடுத்து வந்த துவைட்ஸ் பனிப்பாறையே இப்போது உருகத் தொடங்கியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் துவைட்ஸ் உடைந்தால் மற்றவை உருகியோட அதிக காலம் தேவையில்லை. இதனால் பூமியின் கடலோரப்பிரதேசங்கள் பல மீட்டர் கடலிற்கடியில் மூழ்கும் அபாயம் ஏர்பட்டுள்ளது. துவைட்ஸ் 2006-2015 காலத்தில் 1.4 மில்லி மீட்டரில் இருந்து 3.6 மில்லிமீட்டர் என்ற அளவில் உருகியது. இப்போது இந்த வேகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்நிலை நீடித்தால் வெகு விரைவில் உலகில் கடற்பகுதிகள் எவையும் கடல்நீரில் மூழ்குவதில் இருந்து தப்பமுடியாது என்ற அச்சம் எழுந்துள்ளது.
கண்ணாடி சாளரங்கள் உடைகின்றன
ஒரு காரின் கண்ணாடி சாளரத்தில் ஆரம்பத் தில் சிறிய சிறிய விரிசல்கள், விள்ளல்கள் ஏற்படும். இதை தீவிரமாக சிந்திக்கவில்லை என்றால் திடீ ரென்று ஒரு நாள் அது உடைந்து நொறுங்கும். இதுபோன்றதொரு சம்பவம் துவைட்ஸிற்கு ஏற்படப் போகிறது என்று ஆரிகான் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் எரின் பெட்டிட் கூறுகிறார். தற்போது இதில் விரிசல்கள் குறைவாகவே ஏற் பட்டுள்ளது என்றாலும் வருங்காலத்தில் நிகழ விருக்கும் மோசமான சம்பவங்களின் அறிகுறி யாக இது கருதப்படுகிறது. அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation), யு கே இயற்கை சூழலியல் ஆய்வுக் கவுன்சில் (Natural Environmental Research Counsil) ஆகிய நிறுவனங்களின் தலைமையில் ஐந்தாண்டு பதவி காலம் உடைய சர்வதேச துவைட்ஸ் பனிப்பாறை பன்னாட்டு ஆய்வுக்குழு செயல்படுகிறது. செயற்கைக்கோள் படங்கள் மற்ற தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடத்தப்படு கின்றன. துவைட்ஸ் பனிப்பரப்பு எளிதில் சென்றடைய இயலாத ஒன்று. வெறும் 28 விஞ்ஞானிகள் மட்டுமே இதுவரை இங்கு சென்றுள்ளனர். அண்டார்டிகாவில் பல நாடுகள் அமைத்துள்ள ஆய்வுக்கூடங்களின் அடிப்படை முகாம்களில் (base camps) இருந்து இது வெகுதொலைவில் உள்ளது. இதனால் இதனைக் கண்காணிப்பது கடினம்.
தீர்வு நம் கையில்
துவைட்ஸ் பனிப்பரப்பைக் காவல் காக்கும் லார்சன் பி பனிப்பாறை தடுப்பணை எப்போது உடையும் என்று விஞ்ஞானிகளால் உறுதியாக கூறமுடியவில்லை. மனிதகுலத்தின் கழுத்திற்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி போல் நிகழ விருக்கும் இப்பேராபத்தில் இருந்து பூமியைக் காக்கவேண்டுமென்றால் உளகளாவிய உடனடி செயல் அவசியம். காப் 26 கிளாஸ்கோ சூழல் உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ள இவ்வேளையில் 300 மீட்டர் அடர்த்தியான 50 மைல் அகலம் உள்ள துவைட்ஸ் பனிப்பாறை உடைந்து உருகத் தொடங்கியிருக் கிறது என்ற எச்சரிக்கும் செய்தி உலக ஆட்சியா ளர்களால் கவனிக்கப்படவில்லை. அவர்கள் கோவிட்19, இயல்பான அரசியல் செயல்பாடுகளுக்குத் திரும்புவதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கிளாஸ்கோ மாநாட்டில் உறுதியேற்ற செயற் திட்டங்களை நிறைவேற்றத் தொடங்குவதற்குள் அடுத்த ஆண்டு வந்துவிடும். அப்போது பூமியை அழிவிற்கு இட்டுச்செல்லும் பேராபத்துகளின் பட்டியலில் துவைட்ஸ் இறுதிநாள் பனிப்பாறையும் ஒன்றாக மாறும். சூழல் சீரழிவுகளால் மனிதன் வாழ்வதே ஆபத்தாகிவரும் காலத்தில் அரசியல்வாதிகளுக் காக துவைட்ஸ் போன்ற பனிப்பாறைகள் காத்துக் கொண்டிருக்காது. பூமியைக் காக்க செயல்படாத ஒவ்வொருநாளும் அழிவின் தீவிரத்தையே அதிகரிக்கும்.