சென்னை, ஜன. 27- 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிக்க ப்பட்டுள்ளன.அதன்படி சிங்காரவேலர் விருது கவிஞரும் ்தீக்கதிர் ஆசிரியரு மான மதுக்கூர் ராமலிங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத், மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ண குமார், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமன், சொல்லின் செல்வர் விருது சூர்யா சேவியர், சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற் ்கும், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவி ராயர், சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களி தழுக்கும், தேவநேயப்்பாவாணர் விருது முனைவர் கு.அரசேந்திரன், உமறுப் புலவர் விருது நா.மம்மது, கி.ஆ.பெ. விருது முனைவர் ம. ராசேந்திரன், கம்பர் விருது பாரதி பாஸ்கர், ஜி.யு.போப் விருது ஏ.எஸ். பன்னீர் செல்வம், மறைமலையடிகள் விருது சுகி.சிவம், இளங்கோ வடிகள் விருது நெல்லைக் கண்ணன், அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான அலாய்சியஸ் ஆகியோருக்கு வழங் ்கப்படுகிறது. இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியவை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப் ்படுவர் என்றும் தமிழக அரசு அறிவித்துள் ்ளது.