tamilnadu

img

சிம்மக்குரலோன் தோழர் பாசுதேவ் ஆச்சார்யா தொழிலாளர் மனதில் என்றும் நிலைத்திருப்பார்

சென்னை, நவ.13- மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவரும் சிஐடியு  முன்னணி தலைவர்களில் ஒருவரு மான பாசுதேவ் ஆச்சார்யா மறைவு  வேதனை அளிப்பதாக தட்சிண  ரயில்வே பென்சனர்ஸ் யூனியன்   தெரிவித்துள்ளது.இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு  குறிப்பாக ரயில்வே தொழிலாளர்களுக்கு அவர் ஆற்றிய பணி மறக்க இயலாது மட்டு மல்ல வரலாற்றில் பொதிந்து கிடக்கும் என்று அந்த யூனியன் தெரிவித்துள்ளது.   புதிய பென்சன் திட்டத்தை  சட்டமாக்கிய போது நாடாளு மன்ற நிலைக்குழுவிலும் நாடாளு மன்றத்திலும் எதிர்ப்பு குரல் எழுப்பியதோடு குறைந்தபட்ச பென்சன் உத்தரவாத படுத்த வேண்டும் என்கிற திருத்தத்தை கொண்டுவந்தவர் அவர்.  அது நிராகரிக்கப்பட்டது என்றாலும் இடதுசாரி கட்சியை  சேர்ந்த அவரும்  ஒரு சிலரும் தான் புதிய பென்சன் திட்டத்திற்கு எதிராக வெளியிலும் உள்ளேயும் போராடினார்கள். ரயில்வேயில் நீராவி என்ஜின்கள் நிறுத்தப்பட்டு டீசல் என்ஜின்கள் புகுத்தப்பட்ட போது தோழர் பாசுதேவ் ஆச்சார்யா உபரியான தொழிலாளர்களின் வாழ்வுக்காக போராடினார். 

நிரந்தரமாக்கப்பட்ட  1லட்சம் அப்ரண்டீசுகள்

நிலக்கரியும் சாம்பலும் அள்ளும்  தொழிலாளர்களின் பணி  நிரந்தரத்துக்காக  நாடாளு மன்றத்திற்கு உள்ளும் வெளியே யும் போராடினார். ரயில்வேயில் பாது காப்பு படை (ஆர்பிஎப்) சங்கத்துக்கு  போராடி அங்கீகாரம் பெற்று தந்தார். ரயில்வேயில் பயிற்சி முடித்த ஆக்ட் அப்ரண்டீஸ்களுக்கு வேலை வழங்குவது நிறுத்தப்பட்டிருந்ததை மீண்டும் துவக்க கோரி அவர் நாடாளுமன்ற மனுக்கள் குழு தலைவராக இருந்தபோது டிஆர்இயுவின் கோரிக்கையை ஏற்று பரிந் துரை செய்ததால் அதன் பின்  இந்தியா முழுவதும் ஒரு லட்சம்  அப்ரண்டீசுகள் நிரந்தரமாக்கப் பட்டனர்.தெற்கு ரயில்வேயில் மட்டும் 5000 பேர் நிரந்தரமானார்கள்.   பொதுத்துறை தனியார் மயத்துக்கு எதிராக அவர் விடாப்பிடி யாக போராடினார். ரயில் ஓட்டுநர் களுக்கு ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கக் கூடாது என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை உருவாக்கினார்

சிம்மக்குரலோன் 

தோழர் பாசுதேவ் ஆச்சார்யா  பங்கு  பெறாத தொழிற்சங்கமே இருக்காது என்று சொல்லலாம். தில்லியில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்திக்க அனைத்து அகில இந்திய தொழிற் சங்கங்களுக்கும் வழிகாட்டினார். கூடவே இருந்து பிரச்சனைகளை பேசினார். அதிகாரிகளை அவர்கள் எந்த மட்டத்தில் இருந்தாலும் தொழி லாளர் பிரச்சனைக்காக இறங்கி வந்து பேச அவர் தயங்கியதில்லை. அவர் எந்த ஊருக்கு சென்றாலும் அவரைப் பார்க்க அந்தந்த ஊரிலும் ஏராளமான தொழிலாளர்கள் இருந்தார்கள். தொழிலாளர்களின் பிரச்சனைகளை கூட்டங்களில் பேசும்போது அவர் சிம்மகுரலோன் தான். கடைசி காலத்திலும் அவரது குரல் வற்றவே இல்லை. நீ்ரிழிவு நோய் அவரை வாட்டி எடுத்தது என்றாலும் அவர் நாடு முழுவதும்  தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொள்வதில் எந்த தயக்க மும் காட்டியதில்லை. ஆர்.இளங்கோவன்,  தலைவர் டிஆர்இயு பென்சனர்ஸ் சங்கம்