tamilnadu

img

யுத்தம்

தெரியாமல் பந்து பட்டு
கண்ணாடி உடைந்ததற்கு
மகனை அடிக்கிற..

குழம்பில் உப்பு கூடிப் போச்சு
என்பதற்காக
சாப்பாடு தட்டை வீசியெறிகிற...

தாமதமாக வந்ததற்கு
கதவை டமாரென்று 
இழுத்து மூடுகிற...

தெருவில் நிற்கும் 
மரத்தின் உரிமைக்காக
பக்கத்து வீட்டுக்காரரை
அசிங்கமாக திட்டுகிற....

ஒரு கொடி மரத்திறக்க 
எதிர்க்கட்சிக்காரரை
வெட்டி வீழ்த்துகிற...

‘நாம்’ கேட்கிறோம்
எதற்காக இந்த யுத்தம்?

நாம் பெரியாளாகிப்
போனதுதான் ‘யுத்தம்’