tamilnadu

img

நீட்... தேர்வு அல்ல; பலிபீடம்!

சென்னை,பிப்.8- பல மாணவர்களை கல்ல றைக்கும், சில மாணவர் களை சிறைக்கும் அனுப்பி யுள்ளது நீட் தேர்வு. இது தேர் வல்ல மாணவர்களின் உயிர்  பறிக்கும் பலிபீடம்” என்று  சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். நீட் விலக்கு மசோதா  தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சிறப்புக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஆற்றிய உரையின் சுருக்கம் வரு மாறு:- சட்டப்பேரவையின் இறையாண்மையை, உரி மையைக் காப்பதற்காகவும் நாம் இன்று கூடியிருக் கிறோம். கூட்டாட்சி தத்துவம் காப்பற்றப்படுவதற்காக நாம் இன்று கூடியிருக்கி றோம். நான் 16 வயதில் அரசி யல் களத்தில் நுழைந்தேன். என்னுடைய பொது வாழ்கை யில் மறக்க முடியாத நாளாக  இந்த நாள் அமைந்து ள்ளது. அரசுப் பள்ளி மாண வர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளிட்ட  இடஒதுக்கீடு செயல்படுத்தப் படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக  நாடு முழுவதும் 118  வழக்குகள் போடப்பட் டுள்ளன. தமிழகம்தான் முதலில் வழக்குப் போட்டது.  கடந்த 2010ஆம் ஆண்டு நீட்  தேர்வு முன் மொழியப் பட்டபோதே, தலைவர் கருணாநிதி அதனைக் கடுமையாக எதிர்த்தார். நீட் தேர்வு முறை அரசிய லமைப்பு சட்டத்திற்கு எதிரா னது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீட் தேர்வு என்பது தனி யார் பயிற்சி நிறுவனங்க ளுக்கு சாதகமானதுதான். ஏழை, எளிய மாணவர்களின் கனவுக்கு ஒரு தடுப்புச் சுவர். நீ மருத்துவராக வேண் டாம் என்று ஒருசிலரை மட்டும் நீட் தேர்வு தடுக்கி றது. பயிற்சி மையங்களில் சேர்ந்து மீண்டும் மீண் டும் தேர்வு எழுதுபவர்க ளுக்குத்தான் இந்தத் தேர்வு  பயனுள்ளதாக இருக்கி றது. அவ்வளவு பணம் கொடுத்து பயிற்சி பெற  முடியாதவர்கள் உள்ளார் கள். அவர்களுக்குத்தான் நாம் நீட் விலக்கு கேட்கி றோம். அறிவுத் தீண்டாமை! நீட் தேர்வுக்கு முன்  90 விழுக்காடு இடங்களை மாநில பாடத்திட்ட மாண வர்கள் பெற்றுவந்தனர். தகுதி என்ற போர்வையில் உள்ள நீட் தேர்வு என்ற அறிவுத் தீண்டாமையை நாம் அகற்ற வேண்டாமா? நீட் தேர்வு என்பது பணக் கார நீதியை பேசுகிறது; அரசியலமைப்பு என்பதே சட்டத்தின் நீதியப் பேசுகி றது. 

அறிவுத் தீண்டாமை!

நீட் தேர்வுக்கு முன்  90 விழுக்காடு இடங்களை மாநில பாடத்திட்ட மாண வர்கள் பெற்றுவந்தனர். தகுதி என்ற போர்வையில் உள்ள நீட் தேர்வு என்ற அறிவுத் தீண்டாமையை நாம் அகற்ற வேண்டாமா? நீட் தேர்வு என்பது பணக் கார நீதியை பேசுகிறது; அரசியலமைப்பு என்பதே சட்டத்தின் நீதியப் பேசுகி றது. 

மாநிலங்களின் கதி என்ன?

அரசியலமைப்புச்சட்டம் கூறக்கூடிய சமத்துவத்திற்கு எதிரானது நீட் தேர்வு. அதனை எதிர்த்து நிறை வேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பியனுப் பியுள்ளார். இதன்மூலம் சட்டப்பேரவையின் இறை யாண்மை கேள்விக்குறியா கியுள்ளது. சட்டப்பேர வையின் தீர்மானத்தை ஆளு நர் நிறுத்திவைக்க முடியு மென்றால் மாநிலங்களின் கதி என்ன?  நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் மசோதாவை மதிக்காமல் திருப்பி அனுப்பியது மக்க ளாட்சிக்கு எதிரானது. ஆளு நர் என்பவர் அமைச்ச ரவைக்கு கட்டுப்பட்டே நடந்துகொள்ள வேண்டும். நீட் தேர்வால் முறை கேடுகள்தான் அதிகரித் துள்ளது. 2019ஆம் ஆண்டு 4 பேரும், 2020 ஆம் ஆண்டு 5 பேரும் நீட் தேர்வில் முறை கேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த  ஆண்டு 15 பேர் முறைகேட் டில் ஈடுபட்டதாக மக்கள வையில் ஒன்றிய அரசே கூறி யுள்ளது. இது தொடர்பாக தற்போது வரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மாணவர்களை கல்லறைக்கும், சில மாண வர்களை சிறைக்கும் அனுப் பியுள்ளது நீட் தேர்வு. இது தேர்வல்ல மாணவர்களின் உயிர் பறிக்கும் பலிபீடம். ஆகவே, இந்த நீட் தேர்வு தேவையா என்பதுதான் இந்த மாமன்றத்தில் நான் எழுப்பக்கூடிய கேள்வி. நான் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மாணவச் சமுதாயமும் பெற்றோர்களும் எழுப்பக் கூடிய கேள்வி. அதனால் தான் நீட் தேர்வில் இருந்து  விலக்கு பெறும் மசோ தாவை நாம் நிறைவேற்றி னோமே தவிர; ஏதோ  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நிறைவேற்றிவிட வில்லை. பல மாணவர்களின்  மருத்துவக் கனவைச் சிதைத்த இந்த நீட் தேர்வில்  இருந்து விலக்கு பெறு வதே தமிழ்நாட்டு மாணவர் களுக்கு நன்மை பயக்கும்.  நீட் தேர்வு சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்க ளுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி  ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.