tamilnadu

ஆக்கிரமிப்பு நிலத்தை உரிமை கோரும் சாஸ்த்ரா பல்கலை.

சென்னை, மார்ச் 26 - ஆக்கிரமித்த நிலத்தை ஒதுக்கீடு செய்யும் படி கோரிக்கை வைக்க தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கு உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருமலை சமுத்தி ரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்க லைக்கழகம் 31.37 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அந்த நிலத்தை தங்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. புறம்போக்கு நிலத்தை அரசிடம் ஒப்ப டைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன்பின், அரசை அணுகிய பல்கலைக்க்க் கழக நிர்வாகம், ஆக்கிரமித்த இடத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரியது. அதை நிராகரித்த அரசு, நான்கு வாரங்களுக்குள் நிலத்திலிருந்து வெளியேறும்படி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து பல்கலைக் கழகம் மீண்டும் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் டி. ராஜா, சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக் கழகம் தரப்பில் 1984ஆம் ஆண்டு முதல் அரசு நிலத்தில் பல்வேறு கல்வி நிலைய கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த இடத்திற்கு மாற்று இடம் தரவும், வித்தியாச தொகையை செலுத்தவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. திறந்தவெளி சிறைச்சாலை கட்டுவ தற்காக குறிக்கப்பட்ட இடத்தை பல்கலைக் கழகம் ஆக்கிரமித்துள்ளது. வணிக நோக் கத்துடன் செயல்படும் பல்கலைக் கழகம், அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய கோர உரி மையில்லை என அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 29 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.