tamilnadu

img

மகாத்மா காந்தி பல்கலை.மாணவர் சங்க தேர்தல்: 112 கல்லூரிகளில் எஸ்எப்ஐ மாபெரும் வெற்றி

கேரள மாநிலம், மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடைபெற்றமாணவர் சங்கத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (SFI) வரலாறு படைத்துள்ளது. அமைப்பு அடிப்படையில் தேர்தல் நடந்த 129 கல்லூரிகளில் 112 கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கம் மகத்தான வெற்றி பெற்றது. எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள 46 கல்லூரி களில் 37 கல்லூரிகளையும், கோட்டயம் மாவட் டத்திலுள்ள 38 கல்லூரிகளில் 36 கல்லூரிகளை யும், இடுக்கி மாவட்டத்திலுள்ள 27 கல்லூரிக ளில் 22 கல்லூரிகளையும், ஆலப்புழாவில் தேர்தல் நடந்த ஒரே ஒரு கல்லூரியையும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 17 கல்லூரிகளில் 16 கல்லூரிகளையும் எஸ்எப்ஐ கைப்பற்றியுள்ளது. ‘அரசியலற்றவாதம் மற்றும் வகுப்புவாத முழக்கங்’களுக்கு எதிராக ‘ஆக்கப்பூர்வமான அரசியல், மதச்சார்பற்ற கல்லூரிகள்’ என்ற முழக் கத்துடன் இந்திய மாணவர் சங்கம் தேர்தலை எதிர்கொண்டது. இதில், எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரி யில் எஸ்எப்ஐ-க்கு எதிராக ஊடகங்களும் வலது சாரி அமைப்புகளும் தீவிரப் பிரச்சாரம் செய்தன. ஆனால் எஸ்எப்ஐ மிகப்பெரும்பான்மை யுடன் வெற்றி பெற்றது. இதுபோல அரசு சட்டக் கல்லூரியிலும் வரலாற்று வெற்றியை எஸ்எப்ஐ சாத்தியமாக்கியுள்ளது. 10 கல்லூரிகளில் போட்டியின்றி வெற்றி இடுக்கி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் நிறை வடைந்த நிலையில், அடிமாலி எம்.பி. கல்லூரி, நெடும்கண்டம் எம்இஎஸ் கல்லூரிகளின் மாண வர் சங்கத்தை கேஎஸ்யூ(KSU)-விடமிருந்து எஸ்எப்ஐ மீண்டும் கைப்பற்றியது. வேட்புமனு தாக்கல் செய்தபோதே 10 கல்லூரிகளில் எஸ்எப்ஐ போட்டியின்றி வெற்றி பெற்றது. ஆலப்புழா மாவட்டத்தில், எம்.ஜி.பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட ஒரே கல்லூரியான எடத்துவா செயிண்ட் அலெசியஸ் கல்லூரியின் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது.  எஸ்எப்ஐ வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்து மாணவர்களுக்கும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. அனுஸ்ரீ, மாநிலச் செயலாளர் பி.எம். ஆஷோ ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.