tamilnadu

மதுரை நகரில் பாலியல் குற்றங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

மதுரை, மே 13- மதுரை நகரில் பாலியல் குற்றங் கள் நடைபெறுவதாக வெளியான செய்திகளின்  அடிப்படையில் மதுரை மாநகர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் புத னன்று வெளியிட்டுள்ள அறிக்கை:- மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி, பள்ளி மாணவி களை குறிவைத்து மூன்று நபர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியுள்ளது. மேற்கண்ட நபர்கள் சிக்கன் 101 என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் உம் சலீம் டிரேடர்ஸ் என்ற பெயரில் மொபைல் கடையும் வைத்துள்ள தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட மூன்று நபர்கள் மாணவிகள் செல் ரீசார்ஜ் செய்ய வரும்போது அவர்களில் சிலரது மொபைல் எண்களை தேர்வு செய்து காம்போ ஆபர் சலுகை என்று மாண விகளின் பேஸ்புக், வாட்ஸ்ஆப் களில் விளம்பரம் செய்வது இந்த விளம்பரங்களைப் பார்த்து மாணவி கள் தொடர்பு கொள்ளும் போது மொபைல் எண்களின் மூலம் மூன்று நபர்களும் பேசி மாணவிகளை தன் வசப்படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் செய்திகள் உள் ளது. எனவே மக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்களை மதுரை மாநகர் காவல்துறை போக்க வேண்டும். நரிமேடு பகுதியில் உள்ள கல்லூரி பள்ளிகளில் பயிலும் மாணவிகள் எதிர்கால நலன் கருதி குற்றம் நடை பெற்றதா? இல்லையா? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மதுரை நகரில் பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதிலும் பெண் கள் பாதுகாப்பாக இருப்பதை உறு திப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

;