tamilnadu

img

இபிஎஸ் 95 ஓய்வூதியர் பிரச்சனையில் மாநில அரசும் கவனம் செலுத்த வேண்டும்

சென்னை, ஏப். 25 - இபிஎஸ் 95 ஓய்வூதியர் பிரச்சனையில் மாநில அரசும் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சு.திருநா வுக்கரசர் எம்.பி., வலியுறுத்தி உள்ளார். இபிஎஸ் 95 ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். ஆன்லைன் பதிவு திட்டத்தை கைவிட்டு, நேரடியாக மனுக்களை பெற வேண்டும், மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில்வே கட்டணச் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வா யன்று (ஏப். 25) சென்னையில் மணியோசை  எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

சென்னை இபிஎப் பென்ஷனர்கள் நலச்சங்கம் இந்த போராட்டத்தை நடத்தி யது. இந்தப் போராட்டத்தில் சு.திருநா வுக்கரசர் பேசுகையில், “மக்கள்தான் தேசம். மக்களை அரசு மகிழ்ச்சியாக வைத்துக்  கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு இபிஎஸ்95 ஓய்வூதியர்களின் கோரிக்கை களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இந்த பிரச்சனையில் மாநில அரசும் குரல் கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும்” என்றார். “நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் போது, தில்லியில் அனைத்துக்கட்சி தலை வர்கள் பங்கேற்கும் வகையில் போராட்டம் நடத்த வேண்டும். அப்போது பிற மாநில எம்.பி.க்களையும் ஒருங்கிணைத்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுக்க ஏதுவாக இருக்கும்” என்றும் அவர் கூறினார். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், இபிஎஸ்95 அகில இந்திய பென்ஷனர்கள் சங்கத் தலைவர் கே.கனகராஜ், சங்கத்தின் தலைவர் கே.பி.பாபு, இணைச் செயலாளர் டி.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர்.