tamilnadu

img

மரணம் தப்பிய கரணம் - கோவி.பால.முருகு

செல்வன் வீடு கட்டிக் கொண்டிருந்  தான். புது வீடு கட்டவேண்டும்  என்பது அவனுடைய நீண்ட  நாள் கனவு என்றாலும் தான் வாங்கியிருந்த  பழைய வீட்டை இடித்துவிட்டுப் புதுப்பித்  துக் கட்டினான்.அவனுக்கு, தானே சொந்த  பொறுப்பில் வீடு கட்டுவது என்பது சிரம மான காரியம். எந்த வேலையாக இருந்தா லும் மொத்தமாகப் பேசி விட்டுவிடுவான். அவ்வாறே நாச்சியப்பன் என்ற பொறி யாளரிடம் வீட்டின் அமைப்பையும் அள வையும் சொன்னான்.அவர் கணக்குப்  போட்டுச் சொன்ன பத்து லட்சத்தில் ஒரு  சிறிய தொகையை முன்பணமாகக் கொடுத்து கையொப்பம் வாங்கிகொண் டான். வீட்டு வேலை ஆரம்பித்து நடந்து  கொண்டிருந்தது.மொத்தமாகப் பேசி விட்டாலும் அருகில் நாள் முழுவதும் அவர்கள் பக்கத்தில் இருந்து கவனித்து  வருவான். கட்டுமானத்தை உறுதிப்படுத்த முதல்நாள் கட்டிய பகுதியில் மறுநாள் காலை தண்ணீர் பீய்ச்சுவது அவன் வேலையாக இருந்தது. ஒரு மாதத்தில் ரூஃப் போட்டு விட்டார்  கள். முதல் மாடி முடிந்து இரண்டாம் மாடி  வேலை நடந்து கொண்டிருந்தது.வீட்டின்  வெளியே மாடிப்படிகளை அமைத்தி ருந்தார்கள். எப்போதும் போல் அன்று காலை நேற்றைய கட்டுமானத்தில் தண்  ணீர் அடித்துக் கொண்டிருந்தான். மாடிப்  படி கட்டியிருந்தார்களே தவிர, படிக்குப்  பக்கத்தில் கைப்பிடிச் சுவர் கட்டவில்லை.  எல்லா இடத்திலும் தண்ணீர் அடித்துக் கொண்டே வந்தவன்.மாடிப் படியில் தண்ணீர் அடிக்கத் தொடங்கினான்.முன் பக்கம் பர்த்துக் கொண்டு தண்ணீர் அடித்துக் கொண்டு வந்தவனுக்கு, பின்னே  படியில் கைப்பிடி வைக்கவில்லை என்ற எண்ணமே தோன்றாமல் போனது. விளிம்பிற்கு வந்தவன் அப்படியே பின்  பக்கமாகச் சாய்ந்தான். இரண்டாவது மாடி யிலிருந்து, சுமார் இருபதடி உயரத்திலி ருந்து பொத்தென்று வீழ்ந்தான். விழும்  போதே இன்று நம் வாழ்வு முடிந்து விட்டது  என்று எண்ணினான். பக்கத்தில் சிமெ ண்ட்டாலான மழைநீர் சேகரிப்புத் தொட்டி  இருந்தது. அதில் வீழ்ந்திருந்தால் உயிர்  போயிருக்கும்.முதுகு கடினமான மண்தரையில் வீழ்ந்தது. வீழ்ந்த வேகத்தில்  எழுந்து உட்கார்ந்தான். முதுகில் பலத்த அடி கொஞ்சம் மூச்சு  விட முடியாமல் திணறினான். உயிர் பிழைத்துக் கொண்டோம் என்ற எண்ணம்  அவனுக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாக வும் இருந்தது. பொத்தென்று வீழ்ந்த சத்தம்  வீட்டின் உள்ளிருந்த அவன் மனைவிக்குக்  கேட்டு ஓடோடி வந்தாள். அதற்குள் எழுந்து வந்து வாயில் படிக்கட்டில் அமர்ந்தான்.  “அய்யய்யோ மண்டை உடஞ்சிடிச்சுங்க பனியனில் இரத்தம் வழிந்து ஓடிக்கொண்டி ருக்கிறது” என்று சொல்லி பதறிப் போனார்  அவர் மனைவி. அவனையும் அறியாமல்  கீழே விழுந்தபோது மழை நீர்த் தொட்டி யின் மேல் பகுதியின் ஓரத்தில் தலை மோதி  மண்டை உடைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். உடனே பக்கத்தில் இருக்கும் நண்ப ருக்கு ஃபோன் செய்து செய்தியைச் சொன்னான். அவரும் பதறியடித்து உடனே வந்துவிட்டார்.அவருடைய இரு சக்கர வண்டியில் ஏறி பின்னே உட்கார்ந்தான்.மீனா மருத்துவமனைக்குச் சென்று அங்கிருந்த பெஞ்சில் படுத்தான். அதற்குப் பிறகு மருத்துவர் வந்தது, தலையில் தையல் போட்டது, எதுவுமே தெரியாது. மயக்க நிலைக்குப் போய் விட்டான். அனைத்தும் முடிந்தபிறகு நண்பர் உடம்பை உலுக்கினார். கண் விழித்துப் பார்த்தான். “அய்யா.. காஃபி,  டீ ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்றார் நண்பர்.

தலையை ஆட்டினான். சிறிது  நேரத்திலேயே காஃபி வந்தது. குடித்தபின்  கொஞ்சம் நினைவு வந்தது. வீட்டிற்கு வந்த வனால் நேராகப் படுக்க முடியவில்லை. முதுகில் கடுமையான வலி. நான்கு நாள்கள் மருந்து சாப்பிட்ட பிறகு வலி ஓரளவு குறைய ஆரம்பித்தது.  ஒன்றில் கவனம் செலுத்தும்போது மற்றொன்றை மறந்துவிடுவோம்.இதைப்போலத்தான் இளைஞர்கள்.மலை முகட்டில் செல்ஃபி எடுக்கப் போய் கவனமின்றி மலையிலிருந்து கீழ் விழுந்து  இறப்பதும், கடலில் விழுந்து இறப்பதை யும் செய்தித் தாள்களிலும், தொலைக் காட்சியிலும் பார்க்கிறோம். கவனம் வேறொன்றில் இருக்கும போது இதுபோன்ற ஆபத்துகள் வந்து சேரும். எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம் என்பது தான் செல்வத்திற்கு ஏற்பட்ட ஆபத்து உணர்த்துகிறது. இப்போதும் கூட செல்வம் அந்த உயரத்தைப் பார்த்துப் பார்த்து அவ்வளவு உயரத்திலிருந்து வீழ்ந்து  பிழைத்துக் கொண்டதை எண்ணி பிர மித்துப் போவான்.எல்லோரும் பிழைத்துக்  கொள்வார்கள் என்பதற்கு எப்படி உறுதி சொல்ல முடியும்?