சென்னை, பிப்.15- எப்போதும் மக்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்க ளிக்க வேண்டும் என்று திரைக் கலைஞர் ரோகிணி வாக்காளர் களுக்கு வேண்டுகோள் விடுத்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சென்னை மாநகராட்சி 98ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் ஆ.பிரிய தர்ஷினியை ஆதரித்து திரைக் கலை ஞர் ரோகிணி வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார். மேலும் மக்க ளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இந்த பிரச்சாரத்தின்போது பேசிய ரோகிணி, “ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் எப்போதும் மக்களின் பிரச்சனை களுக்கு முன்நின்று போராடுபவர் கள், தீர்வு காண்பவர்கள் கம்யூ னிஸ்ட் தோழர்கள்” என்றார். அடிப்படை பிரச்சனைகளிலும் சமூக அக்கறையும் மக்களுடன் தொட ர்பும் உள்ளவர்களால்தான் தீர்வு காண முடியும்.
அந்த வகையில், குடிநீர், பாதாள சாக்கடை அடைப்பு, முதியோர்களுக்கான ஓய்வூதியம் போன்ற பிரச்சனைகளுக்கு எந்த சமரசமும், பாகுபாடும் இன்றி குரல் கொடுக்கக்கூடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரியதர்ஷினி உள்ளிட்ட அக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்றும் ரோகிணி கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது, ஹிஜாப் பிரச்சனை குறித்த செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஆடை அணிவது அவரவர் உரிமை. அதை தடை செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது. நீங்கள் இதை அணியக் கூடாது என்று கூறு வதும், நீ இதைத்தான் அணிய வேண்டும் என்று கூறுவதும் ஒரு பிரி வினைவாத செயல்தான்.
இப்படிப் பட்ட பிரிவினைவாத செயல்களுக்கு யாரும் ஊக்கம் அளிக்கக் கூடாது. மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாக்க அனை வரும் முன்வர வேண்டும்” என்றார். இந்த பிரச்சாரத்தில் வில்லி வாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, திமுக வட்டச் செயலாளர்கள் காஞ்சி சே.துரை, கே.பாஸ்கர், முனுசாமி தாஸ், பாக்கியராஜ் (காங்கிரஸ்), ஏ.டேனியல் (விசிக), பா.தாம்சன் (மதிமுக), மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேஸ்வரன், சி.திருவேட்டை, இரா.முரளி, வெ.தனலட்சுமி, எஸ். சிவசுப்பிரமணியம், பகுதிச் செய லாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.