வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான சிக்கிம் மாநிலத்தில் கடந்த அக்.3 அன்று திடீர் மேக வெடிப்பு காரணமாக டீஸ்தா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி இயல்புநிலையை இழந்தது. இந்த வெள்ளத்தில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உட்பட40 பேர் உயிரிழந்த நிலை யில், 76 பேர் மாயமாகியுள்ளனர். 4 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாமில் தற்போது வரை தங்கியுள்ளனர். இந்நிலையில், சிக்கிம் போன்று இமய மலைக்கு கீழே உள்ள மாநிலங்கள் பேர ழிவை சந்திக்கும் என உலக பனிப்பாறை கண்காணிப்பு பிரிவு விஞ்ஞானிகள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,”அதிகரித்து வரும் வெப்பநிலை, பனிப்பாறை உருகு தல், காலநிலை மாற்றத்தின் பல மடங்கு விளைவு, மலை வாசஸ்தலத்தில் கட்ட மைக்கப்படாத கட்டுமானம் மற்றும் காற்று மாசு ஆகியவையே சிக்கிமில் பேர ழிவை ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக இமயமலையில் பனிப்பாறை ஏரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிக்கிம் போன்று இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இமயமலைக்கு கீழ் உள்ள பிற மாநிலங்களும் கடுமையான பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளது” என எச்சரித்துள்ளனர்.