tamilnadu

img

சிறிய வகை செயற்கைக் கோள்களை உருவாக்க வேண்டும்

சென்னை,பிப்.23- நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் சிறிய வகையிலான செயற்கைக் கோள்களை மாண வர்கள் உருவாக்க வேண்டும் என்று தேசிய அறிவியல் தின  தொடக்க விழாவில் விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை அறிவுறுத்தி யுள்ளார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் தனது  புகழ்மிக்க ‘ராமன் விளைவு’ கோட்பாட்டை வெளியிட்ட பிப்.28 ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதால், தேசிய அறிவியல் தினத்தை பிப்.22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அறிவியல் திருவிழாவாக கொண்டாட ஒன்றிய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஒன்றிய அரசின் விக்யான் பிரச்சார் அமைப்பு, அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஒ), போர் ஊர்தி ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனம் (சிவிஆர்டிஇ) ஆகியவை சார்பில் சென்னை  கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல், தொழில் நுட்ப மையத்தில் தேசிய அறிவி யல் திருவிழா தொடங்கியது. இதில், நாட்டின் தலைசிறந்த 75 விஞ்ஞானிகளின் வாழ்க்கை குறிப்பு, டிஆர்டிஓ ராணுவ கவச  வாகனங்கள், பிரம்மோஸ் ஏவுக ணையின் மாதிரிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், விஞ்ஞானியுமான ஏ.சிவதாணுப் பிள்ளை கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்க ளிடையே பேசிய அவர், “தற்போது நம்மிடம் உள்ள தொலைநோக்கிகளை கொண்டு, குறிப்பிட்ட அளவில் மட்டுமே ஆராய்ச்சி செய்ய முடி கிறது. வருங்காலத்தில் அதிக  தூரம் பார்க்கும் தொலை நோக்கிகளை மாணவர்கள், இளைஞர்கள் உருவாக்க வேண் டும். இதன்மூலம் விண்வெளி துறையில் நோபல் பரிசை எளிதாகப் பெறலாம்” என்றார். விண்வெளி துறையின் வளர்ச்சி, செயற்கைக் கோள் கள் ஆகியவை தேவையில்லை என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், நாடு சுதந்திரம் பெற்ற தில் இருந்தே, விவசாயம், அறிவியல், பொருளாதாரம் என  அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் செயற்கைக் கோள்கள் முக்கிய பங்கு வகிக் கின்றன. நாட்டின் முன்னேற் றத்துக்கு உதவும் சிறிய வகை யிலான செயற்கைக் கோள்களை உருவாக்க மாணவர்கள் முயற்சி செய்யவேண்டும். விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம் 2023 ஆம் ஆண்டு செயல் படுத்தப்பட உள்ளது. இது இந்திய விண்வெளி துறை வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் சாதனையாக அமை யும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், சிவிஆர்டி இ இயக்குநர் வி.பாலமுருகன், தமிழ்நாடு அறிவியல், தொழில் நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜப் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.