திருவள்ளூர், ஜூலை 25- “திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கீழச்சேரி தனியார் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்” என்று மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கல்யாண் தெரிவித்துள்ளார். மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழச்சேரி ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி விடுதி யில் தங்கி 12ஆம் வகுப்பு படிக்கும் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம்-முருகம்மாள் மகளான மாணவி சரளா (17), திங்க ளன்று (ஜூலை 25) விடுதியில் இருந்து காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக தோழிகளு டன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் சக தோழிகள் உணவு அருந்தச் சென்றநிலையில், தனியாக இருந்த மாணவி சரளா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன் காவல் துணை ஆய்வாளர் இளங்கோ சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக திரு வள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகம் முன்பு ஏராளமானோர் குவிந்த னர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளி வளா கத்தின் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சி. கல்யாண், திரு வள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
இந்த நிலையில், மற்ற மாணவர் களுடைய பெற்றோர் மற்றும் சரளாவின் உறவினர்கள் விடுதியை முற்றுகை யிட்டு, திருத்தணி - பொதாட்டூர் சாலை யில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது ‘எங்களுடைய பிள்ளை களைக் காண வேண்டும்’ என்று முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கல்யாண் கூறும்போது, சில தினங்க ளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிகளில் ஏதாவது மாணவி தற்கொலை செய்து கொண்டதால், அந்த தற்கொலை வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதன்படி, காவல்துறை புகாரை வாங்குவதற்காக காத்திருக்கிறோம். புகார் கிடைத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன், வழக்கு உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்றப்படும். சிபிசிஐடி போலீஸார், உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி விசாரணை நடத்துவர்” என்றார். கள்ளக்குறிச்சியைப் போல் திரு வள்ளூர் மாவட்டத்திலும் மாணவி மர்ம மரணச் சம்பவம் நடந்துள்ளதால் திரு வள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கல்யாண், காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா மற்றும் நூற்றுக்கும் மேற்ப ட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.