முதல் 5 ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, மார்ச் 30 - தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆயிரக் கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாண வர்கள் பயில்கின்றனர். இந்தச் சூழலில் தமிழகத்தில், நடுநிலைப் பள்ளி களுக்கான முழு ஆண்டுத் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடை பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத் தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வரு கிறது. இதனால், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படியும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதல்கள் படியும் தேர்வு கள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17 வரை நடத்தப்படும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.