tamilnadu

img

வள்ளலார் - - புலிகரம்பலூர் பொன்னையன்


உலகைத் திருத்தவே வந்தார்-மக்கள்
      ஒன்றாக சன்மார்க்க சங்கமே தந்தார்!
விலக மதமொடு சாதி -நெஞ்சில்
       விளங்கவே அருட்பா பாடினார் ஆதி!

சன்மார்க்கத் தொண்டர்கள் கூடி-அருட்பா
        தந்திடும் கொள்கைப் பரப்பினார்  ஓடி!
தங்காத பசிப்பிணி போக்க-தருமச்
        சாலை அடுப்பினை மூட்டினார் நீக்க!

தேடிடும் ஆண்டவன் எங்கே-என்று
     தேடிடு வார்க்குசபை கட்டினார் அங்கே
வாடிடுவோர் வாட்டங்கள் தீர்த்தே-இயற்கை
       வளர்க்கும் உயிர்களைப் போற்றினார் சேர்த்தே!

வாழ்ந்திடு வார்க்கேது சாவு-சித்தி
     வளாகம் வளர்த்திடும் சிந்தனை தாவு!
வாழும்  உயிர்களில் தேடி-கருணை
          வாழ்ந்திடும் ஆன்ம நேயமே  நாடி! 

வள்ளலார்   தந்திடும்  அறிவை-ஏற்று
     வாழ்ந்திடு  வாழ்வில் தந்திடும் நிறைவை! 
உள்ளத்தில் ஆர்வம் கொள்வாய்-நன்மை
     ஓடியே வந்திடும் உளத்திலே வெல்வாய்!
           
 

- புலிகரம்பலூர்  பொன்னையன்