தூத்துக்குடி, ஜூலை 7- ஜனநாயக மாதர் சங்கத்தின் தூத் துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சங்கரகோமதியின் நினைவு தின அஞ்சலிக் கூட்டம் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநகர தலைவர் காளியம்மாள் தலைமையில் ராமமூர்த்தி நினைவகத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செய லாளர் கே. எஸ்.அர்ச்சுனன், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பூமயில், சிபிஎம் மாநகர செயலாளர் டி.ராஜா, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் எம்.கமலம், சிபிஎம் மாவட்டக் குழு அலுவலக செயலாளரும் சங்கர கோமதியின் கணவருமான சங்கரசுப்பு, மகள் ராஜ லட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு அவரது உருவப்படத் திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.