மதுரை, மார்ச் 6- கீழடியில் “வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்” தொல்லி யல் துறையின் கீழடி அருங்காட்சி யகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மார்ச் 5 ஞாயிறு மாலை திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமி ழர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செல வில் கீழடி அருங்காட்சியகம் அமைக் கப்பட்டது. இதனை ஞாயிறன்று முதல்வர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, கீழடி அருங்காட்சியகத்தை அமைத்த தொல்லியல் துறை வல்லுநர்கள் மற் றும் சிற்பிகளுக்கு முதல்வர் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இந்த அருங்காட்சியகத்தில், மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர் மேலாண்மையும், ஆடையும் அணி கலன்களும். கடல்வழி வணிகம், வாழ்வியல் எனும் ஆறு பொருண்மை கள் அடிப்படையில் தனித்தனி கட்ட டங்களில் தொல்பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வி யறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதிகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறை சாற்றும் விதத்திலும், அதனை உல கிற்கு வெளிக்கொணரும் வகையிலும், உலகத்தமிழர்கள் பெருமை கொள் ளும் வகையிலும் கீழடி அருங்காட்சி யகம் அமைந்துள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக் கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக் கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரை யில் நகரமயமாக்கல் இருந்ததை உறு திப்படுத்தியது. தற்போது கிடைக்க
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் வாயிலாக வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகமானது வேளா ண்மை மூலம் பொருளாதாரத்தினை உயர்த்திக் கொண்டனர், மட்கலன்கள், இரும்பு, நெசவு, மணிகள், சங்கு வளை யல்கள் ஆகிய தொழில்களை மேற் கொண்டிருந்தனர் என்பதும் அக ழாய்வுச் சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற் பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெக்கப்பட்டுள் ளன. இப்பானை ஓடுகளில் குவிரன் ஆதன், போன்ற தனிநபர்களின் பெயர் கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது வெளிப்படுகிறது. கீழடி அருங்காட்சியக திறப்பு விழா வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ. பெரியசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், அர. சக்கர பாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாக ராஜன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தலைமைச் செயலா ளர் முனைவர் வெ. இறையன்பு, முதன் மைச் செயலாளர் த.உதயசந்திரன், சிவகங்கை ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.தமிழரசி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் உற்சாக வரவேற்பு
முன்னதாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கீழடி எல்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக் குமார் முன்னிலையில் ஆயிரக்க ணக்கானோர் கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பளித்தனர். திருப்புவனம் பேரூ ராட்சி தலைவர் சேங்கைமாறன், மானா மதுரை நகர்மன்றத் தலைவர் மாரி யப்பன் கென்னடி, சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்த், திமுக மாவட்ட துணைச் செயலாளர் மணி முத்து உள்ளிட்டோர் வரவேற்பு கொடுத் தனர். இங்கு அரசு மேல் நிலைப்பள் ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. முதல்வராக இருந்த காமராஜர் 1964 ஆம் ஆண்டில் கீழடி கிராமத்திற்கு வருகை புரிந்த போது மக்கள் கோரிக் கையை ஏற்று பள்ளிக்கூடம் கட்டப் பட்டது. தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினிடம்,கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அரசு மேல் நிலைப்பள்ளிக்கு கட்டிடம் கட்டப்பட் டுள்ளது என்று கிராம மக்கள் தெரி வித்தனர். மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தமிழக முதல்வரை வரவேற்றார். விழா வில் சிவகங்கை நாடளுமன்ற உறுப்பி னர் கார்த்திக் சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துதுரை, மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்பு வனம் பேரூராட்சித்தலைவர் சேங்கை மாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.