காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் சாம்சங் ஆலை தொழிலாளர்களையும் சிஐடியு தலைவர்களையும் புதனன்று (அக்.9) காவல் துறையினர் எந்தவித காரணமுமின்றி கைது செய்தனர். காவல்துறையின் அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். முன்னதாக இரவோடு இரவாக போராட்டப் பந்தலையும் காவல்துறையினர் பிரித்து எறிந்தனர்.