tamilnadu

img

விஐடியில் சாம்சங் நிறுவனத்தின் நவீன ஆய்வகம்

வேலூர்,நவ.29- சாம்சங் ஆராய்ச்சி நிறுவனம் ( இந்தியா ) வேலூர் விஐடி யுடன் இணைந்து மாணவர் - சுற்றுச்சூழல் தரவு அமைப்பு ஆய்வகத்தை நிறுவி யுள்ளது. இந்த ஆய்வகங்கள் மூலம் பேராசிரியர்கள், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல் மற்றும் தரவு பொறியியல் துறையில்  அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் . இதுகுறித்து சாம்சங் ஆராய்ச்சி நிறுவனம்  - இந்தியா  (பெங்களூரு) தலைமை தொழில்நுட்ப அதிகாரி மோகன் ராவ் கோலி,“கூறுகையில் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகம் வேலூர் விஐடி பல்கலைக் கழகத்துடன் சாம்சங் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து துவங்கியிருக்கும் ஆய்வகத்தில் புதிய பல கண்டுபிடிப்புகள்  நுகர்வோர்களின் தேவைகள் பூர்த்தி செய்யும்” என்றார். பி.டெக் 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்கள், எம்.டெக் மாண வர்கள் மற்றும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த ஆய்வகத்தை பயன்படுத்தி ஆராய்ச்சி கட்டுரைகளை சாம்சங் ஆராய்ச்சி நிறுவன பொறியாளர்களின் உதவியுடன் வெளியிடுவார்கள். இந்த ஆய்வகம் 4000 சதுர அடியில் பல்வேறு  மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது . இன்றைய உலகம் பல்வேறு தரவுகளை மையமாக கொண்டு, செயற்கை நுண்ணறிவு தொழில் நட்பத்தை ஒருங்கினைத்து நம் வாழ்வின் பல்வேறு பரிமாற்றங் களை கொண்டு வருகிறது . விஐடி மாணவர் மற்றும் பேராசிரியர்கள் சாம்சங் ஆராய்ச்சி பொறியாளர்களுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு உலகின் பல்வேறு பிரச்சனை களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆராய்ச்சி மையம் உரு வாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த ஆய்வகத்தின் திறப்பு விழா வில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் மற்றும் சாம்சங் ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.