உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் சமாஜ்வாதி தலைமையிலான “இந்தியா” கூட்டணி 44 தொகுதிகளை (சமாஜ்வாதி - 37, காங்கிரஸ் - 6, ஆசாத் சமாஜ் - 1) கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இந்த பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் லக்னோவில் சமாஜ்வாதி கட்சி சிறப்பு கூட்டத்தை நடத்தியது. சமாஜ்வாதி கட்சியின் 37 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், ஊழியர்கள் என அனைவரும் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.