தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன (சிஐடியு) கூட்டம் சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் சம்மேளன தலைவர் ஏ.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்த வேண்டும்; புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்; எரிபொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் சாலை போக்குவரத்து சம்மேளன பொன் விழாவை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மே 20 முதல் 30 வரை சிஐடியு நடத்தும் மாநிலம் தழுவிய நடைபயணத்தை வெற்றிகரமாக்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சம்மேளன பொதுச்செயலாளர் குப்புசாமி, பொருளாளர் பார்த்தசாரதி, மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், நிர்வாகிகள் எஸ்.மூர்த்தி, பி.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.