tamilnadu

img

கம்யூனிஸ்ட்டுகளின் வீரப் போராட்டத்தின் ரத்த சாட்சியே சேலம் சிறை

தேசம் விடுதலை அடைந்த காலம்...  மாடுகள் இழுக்கும் நுகத்தடி களை கட்டி மனிதர்கள் இழுத்துக்  கொண்டிருந்தனர். ரோடு போடும் ரோலரை சிலர் இழுத்துக் கொண்டிருந்தனர். சிறைக் கழிவறை யை அரசியல் கைதிகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று சிறை விதிகளுக்கு மாறாக அராஜகமாக சிறை அதிகாரிகளின்  கொடுமைகள் நடந்து வந்தன. இது ஏதோ ஆங்கிலேயர் காலத்தில் அந்தமான் சிறைக் கொட்டடியில் நடந்தது அல்ல.  சேலம் மத்திய சிறையில் நடந்த கொடுமை. ஆம் (1948-52) ஆம்  ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலம். 1950 இல் மத்திய காங்கிரஸ் அரசின் கொடும் அடக்குமுறை நடவடிக்கையால், தமிழ கத்தின் சிறைகள் முழுவதும் கம்யூனிஸ்ட் தலை வர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அந்த காலத்தில் தேச சுதந்திரத்திற்காக, மக்களுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் தலைவர்களை கிரிமினல் கைதிகளை போல சித்ரவதை  செய்து வந்தனர். அன்றைய சேலம் சிறை தமிழகத்தின் பாதுகாப்பான சிறைகளில் ஒன்று .1862 இல்  ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த சிறை சுமார் 113 ஏக்கரில் பரந்து விரிந்து கிடந்தது. 1432க்கு மேற்பட்ட

1432க்கு மேற்பட்ட தனி அறைகள் கொண்ட சிறையாகவும் உள்ளது. இச்சிறைக்கு ஆலங்கோட்டை சிறை,குரங்கு குல்லா ஜெயில் என பெயரும் உண்டு.  அன்று சேலம் மத்திய சிறையில் தமிழகம், மலபார், ஆந்திராவைச் சேர்ந்த 350 தோழர்கள் குறைந்தபட்சம் 6 மாதம் தண்டனையிலிருந்து 20 வருஷ தண்டனை வரையிலும் அடைக்கப்பட்டிருந்தனர்.  இருபதிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் அனைவரும் சி வகுப்பு கைதியாக இருந்தனர்.  சிறை விதிகளின்படி அரசியல் கைதிகளுக் கான உணவு சிறையில் தரப்படவில்லை. புளித்துப் போன கஞ்சி,சோளக்களி, கீரைக் குழம்பு, கட்டிச்சோறு, ஆளாக்கு நீர்மோர்  இதுதான் உணவு. அரையும் குறையுமா, வெந்தும் வேகாத உணவு தான் தரப்பட்டது. இதனால் தோழர் களுக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு அளவே யில்லை. உடையோ, கொலைக் குற்றவாளி களை போல, அரைக்கால் டவுசர், சட்டை, குரங்கு  குல்லா, நம்பர் கட்டை அணிய வேண்டும். தினம் தினம் அடக்குமுறைகளின் பல வடிவங்களை சந்தித்த கம்யூனிஸ்ட்டுகள் அமைதியான முறையில் போராட முடிவெடுத்தனர்.

1950-பிப்.7-இல் உண்ணாநோன்பு போராட்டம், “நாங்கள் சாப்பிட மாட்டோம்.. எங்களை அரசியல் கைதிகளாக நடத்து.. சித்ர வதைகளை கைவிடு.. அரசியல் கைதிகளுக் கான உணவு வழங்கு... கிரிமினல் கைதிகளை போல் உடை அணியச் சொல்லாதே..நம்பர் கட்டை அணிய மாட்டோம்.. என்று தோழர்களின் போராட்டம் வெடித்தது. கோஷங்கள் சிறைச் சுவரை தாண்டி எதிரொலித்தது. கைதிகள் சாப்பிட மறுத்த செய்தி அரசிற்கு தெரிய வந்தது. இத்த னை கொடுமைகளுக்கும், தலைமை தாங்கிய கொடுங்கோலன் சிறை அதிகாரி கிருஷ்ணன் நாயர் தான். போராட்டச் செய்தி அறிந்த கிருஷ் ணன் நாயர் கோபத்தின் உச்சத்தில் ஆடினான். அடக்குமுறையை அதிகப்படுத்தினால் அடங்கிப் போவார்கள் என திட்டமிட்டான். பாசிச ஹிட்லரையே விரட்டிய செங்கொடி கூட்டம் என்பதை மறந்து விட்டான். பிப்-11 இல் சிறை அதிகாரி கிருஷ்ணன் நாயரின் தலைமையில் சிறைக் காவலர்கள் தோழர்கள் அடைக்கப் பட்டிருந்த சிறைக் கொட்டடியில் அணிவகுத்தனர்.

தடியடி நடக்கும் என எதிர்பார்த்த தோழர்கள்  தற்காப்பிற்காக செங்கல் , கற்களை அறையில் ஒளித்து வைத்திருந்தனர். அடித்தால் பயந்து ஓடுவதல்ல... தற்காப்புக்கு திருப்பித் தாக்குவது என்கிற தீரத்துடன் காத்திருந்தனர்.  இளம் தோழர்களை பின்னுக்கு தள்ளி, முன்னணி தோழர்கள் முன் வரிசையில் அணிவகுத்தனர். கிருஷ்ணன் நாயர் ஆணையிட்டவுடன் அதிகார வர்க்கத்தின் அடிமைகள் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். போர்க்களமாய் சேலம் சிறை மாறிக் கொண்டிருந்தது. தோழர்கள் சிந்திய இரத்தத்தின் பசி அடங்காத சிறைக்காவலர்கள் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்தனர். உரிமையும் காக்க வேண்டும்... உயிரையும் காக்க வேண்டும் ... மண்டியிட்டு இருக்க முடியாது..... என்ற நிலை யில் தோழர்கள் உறுதியாய் நின்று போராடினா ர்கள். தாக்குதல் மறு வடிவம் பெற, தற்காப்புக்காக கற்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானார்கள் .. சுடப் போகிறான்.. சாகப்போகிறோம் என்ற நிலை யிலும் எதற்கும் அஞ்சாத மாவீரர்களாய் நெஞ்சை  நிமிர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இளம் தோழர்களை பாதுகாத்துக் கொண்டே அடக்கு முறையை எதிர்த்து நின்றனர். ஆனால், அதிகார வர்க்கத் திமிர் பிடித்த அந்த சிறை அதிகாரியோ, சுடச்சொல்லி உத்தரவிட்டான். நெஞ்சம் பதறும் காட்சிகளாய், சுட்டு வீழ்த்தப்பட லாயினர்.. அந்த நிலையிலும் ஓடி ஒளியாமல்,  அய்யோ.. அம்மா என கதறாமல் சிறைக்காவ லர்களை எதிர்த்து வீரச் சமர் புரிந்தனர்.  ஒன்றல்ல..  இரண்டல்ல.. 105 ரவுண்டு முறை துப்பாக்கி யால் சுட்டனர். சிறைக்கூடமே இரத்தச்சேறானது. தேச விடுதலைக்கு பாடுபட்ட மக்கள் தலை வர்கள் மூன்றே ஆண்டுகளில் இரத்த வெள் ளத்தில் பிணமாய்க் கிடந்தனர். 17- தோழர்கள் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார்கள், 5 - தோழர்கள் தடியால் அடித்தே கொலை செய்யப் பட்டிருந்தனர். 119 - தோழர்கள் படுகாயமுற்று இரத்தச் சகதியில் கிடந்தனர். அதில் 63 தோழர் களின் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இருந்தது. அதில், கை, கால், மண்டை உடைந்தவர்கள் ஏராளம்.

தமிழகத்தை சார்ந்த திருச்செங்கோடு காவேரி முதலியார், சேலம் அரியாகவுண்டம் பட்டி ஆறுமுகம், விழுப்புரம் ஷேக் தாவூது, உட்பட மலபார், ஆந்திரா தோழர்களும் பலியானார்கள். தேசமே அதிர்ச்சிக்குள்ளானது, நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்தன. சிறையின் மற்ற கைதிகள் எட்டு நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். பெரியார் பிப்-15 விடுதலை ஏட்டின் தலையங்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். திராவிட நாடு ஏட்டில் அண்ணா “ கேட்டது வாழ்வு, கிடைத்தது சாவு” என எதிர்ப்புத் தெரிவித்தார். தில்லியில் ஜெயப்பிரகாஷ் நாரா யணன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரி வித்தனர். அடக்குமுறைக்கு எதிரான கம்யூனி ஸ்ட்களின் வீரம் செறிந்த போராட்டத்தின் “இரத்த சாட்சியானது” சேலம் சிறை. மனிதகுல விடுதலைக்கான போராட்டத்தில் சேலம் சிறைதியாகிகளின் தியாகம் என்றென்றும் அழியாது, நிலைத்து நிற்கும்.

- மேவை.சண்முகராஜா  சேலம் மாவட்டச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)