tamilnadu

img

ஆறரை லட்சம் பக்தர்கள் சபரிமலை வருகை ரூ.45 கோடியை கடந்தது வருவாய்

சபரிமலை, டிச.15- மண்டல-மகரவிளக்கு திருவிழாக்க ளுக்காக வாசல் திறக்கப்பட்டு ஒரு மாதத்தை கடந்த நிலையில் சபரிமலையின் வருவாய் ரூ.45 கோடியை தாண்டியுள்ளது. அப்பம், அரவணை பாயசம் விற்பனை மற்றும் காணிக்கை உட்பட டிசம்பர் 14 வரையிலான வருவாய் இது. அர வணை விற்பனை மூலம் ரூ.17 கோடியும், காணிக் கையாக ரூ.15 கோடியும் கிடைத்துள்ளது. அப்பம் விற்பனை மூலம் ரூ.2 கோடியும், அன்ன தான நன்கொடையாக ரூ.1 கோடியும் கிடைத் தது. மீதமுள்ள தொகை அஞ்சல் வழி பிர சாதம் விற்பனை மற்றும் இதர வகைகளிலி ருந்து கிடைத்துள்ளது. இதுவரை 6.5 லட்சம் பக்தர்கள் சன்னிதா னத்திற்கு வந்துள்ளனர். கோவிட்டுக்கு முன்பு, இந்த காலகட்டத்தில் சபரிமலையின் வருவாய் ரூ.104 கோடியாக இருந்தது.

கோவிட் சமயத்தில் அது ஐந்து கோடி ரூபாயாகக் குறைந்தது. அப்பம், அரவணை தடையின்றி தயாரிக்கப்படுகின்றன. தற்போது 2.5 லட்சம் அரவணை டின்கள் இருப்பு உள்ளது. அப்பம் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறை பாட்டை நிவர்த்தி செய்ய, கூடுதல் பணியா ளர்களை நியமிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தர விட்டுள்ளதாக தேவசம் செயல் அலுவலர் தெரிவித்தார். மண்டல பூஜை நெருங்கும் நிலையில், தரிச னத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, கோவிட் விதிமுறைகளில் மேலும் தளர்வுகள் வழங்கப்படலாம். ஆன்லைன் வரிசையில் முன்பதிவு செய்தும் பக்தர்கள் தரிசனத்துக்கு வராதது நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தரிசனத்திற்கு வர விரும்புவோருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் சுமார் 45,000 பயணிகள் ஆன்லைன் வரிசை யின் மூலம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகி றார்கள். ஆனால் சராசரியாக 35,000 பக்தர்கள் மட்டுமே வருகிறார்கள். உடனடி பதிவு மூலம் சராசரியாக 1,500 பக்தர்கள் வந்து செல்கின்றனர். பாரம்பரிய பாதை திறக்கப் பட்டுள்ள நிலையில் சன்னிதானத்தில் படுக்கை விரித்து ஓய்வெடுக்கும் விரிவைப்பு வசதி தொடங்கப்பட்டுள்ளது. அன்னதான மண்ட பத்திற்கு மேல், விரிவைப்பு மைய்யம் செவ்வா யன்று திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்ல முடியும்.