மதுரை,டிச.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: டிசம்பர் 16, 17 இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு (UFBU) வேலை நிறுத்தத்திற் கான வேண்டுகோளை விடுத்துள் ளது. உடமையாளர்கள் கொண் டுள்ள அக்கறையை விட தொழி லாளர்கள் நிறுவனத்தின் மீது அதிக அக்கறையோடு இருக்கிறார்கள். இரண்டு அரசு வங்கிகள் தனி யார் மயமாகும் என்று அறிவித்த “உடமையாளர்” அரசாங்கம் உலக, உள்ளூர் நிதித் துறையின் கசப்பான அனுபவங்களை கணக்கிற் கொள்ளவில்லை. சீட்டுக் கட்டு சரிவது போல பன்னாட்டு தனியார் வங்கிகள் வீழ்ந்ததை உலகம் கண்டது. உலக நிதி நெருக்கடிக்கு பின்னால் 2008 முதல் 2020 வரை அமெரிக்காவில் திவாலான தனியார் வங்கிகள் 512. இந்தியாவில் 1947 முதல் 1951 வரை திவாலான வங்கிகள் 205, 1951 முதல் 1967 வரை திவால் ஆனவை 476 வங்கிகள். இந்த பின் புலத்தில்தான் வங்கி தேசியமயம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
வங்கி தேசியமயத்திற்கு பின்ன ரும் கூட 1969 இல் இருந்து 2008 வரை 38 தனியார் வங்கிகளை அரசு வங்கிகள் கையில் எடுத்து காப்பாற்றி உள்ளன. இந்தியப் புதிய தலைமுறை தனி யார் வங்கிகளும் சிக்கலில்... குளோ பல் ட்ரஸ்ட் வங்கி, செஞ்சுரியன் வங்கி, யெஸ் வங்கி எல்லாமே தத்த ளித்து அரசு வங்கிகளின் தலை யீட்டால் கரையேறின அல்லது காப்பாற்றப்பட்டன. இவ்வளவு அனுபவங்களுக்கு பின்னரும் தனியார்மயம் என ஒன்றிய அரசு பேசினால் அதற்கு என்ன அக்கறை? வங்கியின் உட மையாளரான அரசாங்கமே வங்கி நலன், சேமிப்புதாரர் நலன் பற்றி கவலைப்படாவிட்டால் கேள்வி கேட்க மாட்டார்களா? யூனியன் வங்கி நிர்வாகம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொழிற்சங்க உரிமைக ளின் மீதான அப்பட்டமான அச்சு றுத்தல்.நியாயத்தை கேட்டால் ஊழி யர்களை மிரட்டுகிறது வங்கி நிர்வா கங்கள். எஜமானரின் குரல் அது! (Masters’ Voice). அரசின் நடவ டிக்கைகளை, வங்கி நிர்வாகங்க ளின் அச்சுறுத்தல்களை வன்மை யாக கண்டிக்கிறேன். வங்கி ஊழியர்களே, அதிகாரி களே!இது உங்கள் வாழ்க்கைக் கான போராட்டம் அல்ல. தேசம் வாழ நீங்கள் காணும் களம். முன்னே றுங்கள்... வெற்றி காணுங்கள்... இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.