திருப்பூர், செப்.17- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை உரு வாக்கிய தலைவர்களில் ஒரு வரும், எழுத்தாளரும், மொழி பெயர்ப் பாளருமான செ.நடேசன் (78) சனிக்கிழமை காலமானார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர், அகில இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான ஆசிரியர் செ. நடேசன் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியில் வாழ்ந்து வந்தார். தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவராகவும் செயல் பட்டு வந்தார். இந்நிலையில், சில நாட்கள் உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செ.நடே சன் சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை மாலை காலமா னார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி யிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயிறன்று நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமார் தெரிவித்தார்.