மதுரை:
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டியெழுப்பும் பணியை மத்திய அரசு துவக்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., கண்டித்துள்ளார். கொரோனா நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சியில் நாடு தவிக்கும் போது ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய கட்டிடம் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.