tamilnadu

உலகச் செய்திகள்

பெலாரசுடனான பயிற்சியை நிறுத்தப் போவதில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ரஷ்யா மீது பொய்யான குற்றச்சாட்டு களை அள்ளிவீசி வருகையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்கப் போவதாக பெலாரஸ் கூறியிருக்கிறது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளின் ராணுவங்களும் இணைந்து நடத்தப்போகும் பயிற்சி பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் நடக்கப் போகிறது. இந்தப் பயிற்சிக்காக ஆயிரக்கணக்கான ரஷ்யப் படைவீரர்கள் பெலாரஸ் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். 

விடுதலை பெறலாம் என்று தைவானை ஊக்கப்படு த்தும் வேலையை அமெரிக்கா விட்டுவிடுவது நல்லது என்று மக்கள் சீனம் எச்சரித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த அமெரிக்காவுக்கான சீனத்தூதர் கின் காங், “இதுபோன்ற முயற்சிகள் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் போரை உருவாக்கிவிடும். தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். தேவைப்பட்டால் அதை எப்போது வேண்டுமானாலும் சீனாவுடன் இணைத்து விடுவோம்” என்று கூறியுள்ளார். 

இத்தாலியில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும்  செர்ஜியோ மாட்டரெல்லா மீண்டும் அப்பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  ஒரு வார காலமாக நாடாளு மன்றத்தில் வாக்கெடுப்பு எட்டு சுற்றுகளாக நடந்து வந்தது. தற்போதைய பிரதமர் மரியோ டிராகி ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில்  அவருக்குப் போதிய ஆதரவு இல்லாததால் 80 வயதாகும் மாட்டரெல்லா மீண்டும் ஜனாதிபதியாகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு அவர் அப்பொறுப்பில் இருப்பார்.