கொச்சி, மார்ச் 1- உக்ரைன் நெருக்கடியை உடனடி யாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அதற்கு ரஷ்யா போரில் இருந்து விலக வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள் ளார். ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றொரு நாட்டின் பாதுகாப்பை பாதிக்கக் கூடாது. நேட்டோவை விரிவு படுத்தாமல் இருப்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்றார் யெச்சூரி. கொச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இரு நாடு களையும் போருக்கு கொண்டு வந்த தில் அமெரிக்கா பெரும் பங்காற்றி யுள்ளது. இந்த விவகாரத்தில் நேட்டோ தலையிடாது என்ற வாக்குறு தியை அமெரிக்கா காப்பாற்ற வில்லை. ரஷ்யா குறுகிய தேசிய வாதத்தை வலுப்படுத்தியது. போருக்கு பயந்து ஆயிரக் கணக்கான இந்திய குடிமக்கள் தாய கம் திரும்ப முயற்சிக்கும் போது, பிர தமர் நரேந்திர மோடி தனது நட வடிக்கைகளை போட்டோ ஷூட் களாக மாற்றி வருவதாக யெச்சூரி கூறினார். வளைகுடா போரின்போதும் லிபியாவிலிருந்தும் லட்சக்கணக்கான மக்களை இந்தியா மீட்டுள்ளது. ஆனால், தற்போது மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போட்டோஷூட்கள் நடைபெற்று வரு கின்றன. உக்ரைன் நெருக்கடி குறித்து சோசலிச சக்திகள் வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன என்றும் யெச்சூரி கூறினார்.