tamilnadu

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறு விடுப்பு போராட்டம்

 சிவகங்கை, மே 11- ஊராட்சி செயலர் களுக்கு பணி விதிகளை ஏற்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் சமூக தணிக்கையாளர்களை தொடர்ந்து பணி செய்ய  அனுமதிக்க வேண்டும். இவர்களை புறத்தேர்வு மூலம் தேர்வு செய்வதை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் கால வாக்குறுதி யான போராட்ட காலத்தை  பணிக்காலமாக எடுத்துக்  கொள்வோம் என தமிழக  முதல்வர் அளித்த வாக்குறு தியை நிறைவேற்ற வேண் டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்  பில் சிறு விடுப்பு போராட்டம் மே 11 அன்று நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத் தில் 95 சதவீதமான அலு வலர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். மாவட்டம் முழு வதும் 12 ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊரக வளர்ச்சி முகமை  அலுவலகம் ,மாவட்ட  வளர்ச்சித் துறை அலு வலகம் இயங்கவில்லை. போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலு வலர் சங்கத்தின் மாவட் டத்தலைவர் வேலுச்சாமி, மாவடட செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கடமலைக்குண்டு  கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் தமிழ்நாடு ஊரக  வளர்ச்சித்துறை அலுவ லர்கள், சங்க வட்டார பொரு ளாளர் முத்து தலைமை யில் மை.ராஜா, முருகா னந்தம் உள்ளிட்ட 32 பணி யாளர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.