ஏ.ஜி.நூரானி எழுதி ஆர்.விஜய்சங்கர் ராமச்சந்திரன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியிடப்பட்டுள்ள “ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்கிற நூல் வெளியிட்டு விழா கோவையில் திங்களன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். தமுஎகச மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன் வரவேற்றார். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,எம்.ஏ.பேபி நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், கலை இலக்கிய பெருமன்றத்தின் வழக்கறிஞர் சுப்பிரமணியம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், பாரதி புத்தகலாயத்தின் நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.