tamilnadu

ரூ.1,635 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்!

ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஜன. 29 - மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஊதிய பாக்கி ரூ. 1635 கோடியை ஒன் றிய அரசு உடனடியாக விடுவிக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னையில் செவ்வாயன்று நடை பெற்ற கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டி ருப்பதாவது: மோடி ஆட்சியில்  தொடர்ந்து நிதி குறைப்பு 2014-இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதற்கொண்டு ஒன்றிய பாஜக அரசு, நூறுநாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதன் அடிப்படையில் 10 ஆண்டுகளாக திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசாங்கம் தொடர்ந்து குறைத்து வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதியளிப்பு சட்டம் 2005-இல்,  ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை தரப்பட வேண்டும்; அரசாங்கம் அறி வித்திருக்கிற சட்ட கூலி முழுமையாக கொடுக்கப்பட வேண்டும் என்று தெளி வாக வரையறை செய்திருந்த போதும்,  நிதி ஒதுக்கீடு குறைப்பு காரணமாக நாடு முழுவதும் ஆண்டு தோறும் 50 சத விகிதம் வேலை நாட்கள் கூட வேலை  வழங்கப்படுவது இல்லை.  இந்தாண்டும் 4 மாதமாக நிதியை விடுவிக்கவில்லை தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 50 சதவிகிதம் முதல் 55 சதவிகி தம் வரை தான் வேலை வழங்கப்படு கிறது. வேலைசெய்த 15 நாட்களில் ஊதியம் தரப்பட வேண்டும். கால தாமதமாக வழங்கப்படும் ஊதி யத்திற்கு வட்டி சேர்த்து ஊதியம் வழங்க  சட்டம் உறுதி செய்துள்ளது. மேலும் இதனை  உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறது.

ஆனால், நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு, இந்த சட்டத்தை மதித்து செயல்பட மறுக்கிறது. வேலை முடிந்து மாநிலங்கள் ஊதிய பட்டியல் அனுப்பியவுடன் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய ஊதியத்தை 4 மாதங்களுக்கும் மேலாக நிலுவை வைத்து இருக்கிறது. இதனால் தீபாவளி பொங்கல் போன்ற விழாக் காலங்களில் கூட மக்கள் கையில் பணமின்றி துயரத்தில் இருந்தனர். தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் பதிலில்லை தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 13 அன்று ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி, ஊதிய பாக்கியை உடனே விடு விக்க கேட்டுக் கொண்டார்.   வழக்கம் போல முதல்வர் கடிதத்திற்கு ஒன்றிய அரசு பதில் தரவில்லை. தமிழ்நாடு முத லமைச்சர் கடிதம் எழுதி இரண்டு வாரங்களை கடந்த சூழலில் ஒன்றிய அரசாங்கம் நிதியை விடுவிக்காத நிலை யில் அடுத்த கட்ட தொடர் முயற்சியாக தமிழக நிதி அமைச்சரும், திமுக எம்.பி.க்கள் குழு தலைவருமான கனிமொழியும், ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழகத்திற்குத் தர வேண்டிய ஊதிய பாக்கி ரூ. 1635  கோடியை உடனடியாக தர வலி யுறுத்தி உள்ளனர்.

திட்டத்தையே முடக்கிவிட பாஜக அரசு முயற்சிக்கிறது

இத்தகைய சூழலில் ஊதிய பாக்கி யையும், வேலையையும் முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மக்கள் தன் னெழுச்சியாகவும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகளும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு பாரபட்சத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். ஒன்றிய அரசு ஏழை - எளிய மக்களின் கூலிப் பணத்தை தராமல் மாநில அரசுகள் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதையும் முடமாக்கி வருகிறது.  ஆகவே ஒன்றிய மோடி அரசு, தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 1635 கோடி ரூபாயை உடனடியாக விடு விக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்து கிறது. இவ்வாறு தீர்மானத்தில் வலி யுறுத்தப்பட்டு உள்ளது.