tamilnadu

img

பால் உற்பத்தியைப் பெருக்க ரூ.1,000 கோடி கடனுதவி!

பால் உற்பத்தியைப் பெருக்க ரூ.1,000 கோடி கடனுதவி!

அமைச்சர் மனோ.தங்கராஜ் பேட்டி

தஞ்சாவூர், மே 16 -  பால் உற்பத்தியைப் பெருக்க கடந்த ஒன்றரை ஆண்டில் விவசாயி களுக்கு ரூ.1,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என பால் வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள ஆவின் நிறுவன வளா கத்தில் புதிதாகக் கட்டப்படும் பால் பண்ணை கட்டுமானப் பணியை வியா ழக்கிழமை ஆய்வு செய்த அவர் பின்னர்  செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது: தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தி யாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இங்கு பால் பண்ணை அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் ரூ. 54  கோடியில் ஒரு லட்சம் லிட்டர் திறன்  கொண்ட பால் பண்ணை அமைக்கப் படுகிறது. இப்பணி 2 மாதங்களில் முடிக்கப்பட்டு, தமிழக முதல்வர் திறந்து  வைக்கவுள்ளார். தமிழகத்தில் வியாழக்கிழமை நில வரப்படி 33.18 லட்சம் லிட்டர் கொள் முதல் செய்யப்படுகிறது. ஆவின் பால் பூத் யார் விரும்பிக் கேட்டாலும், குறிப்பிட்ட இடைவெளி விட்டு, பூத்  அமைக்க அனுமதி வழங்கத் தயா ராக இருக்கிறோம். மாநில அளவில் நிறைய பேர் புதிதாக பூத் அனுமதி பெற்று நடத்துகின்றனர். பால் உற்பத்தியைப் பெருக்கு வதற்காக கடந்த ஒன்றரை ஆண்டில் ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக கடன்  வழங்கப்பட்டுள்ளது. ஆவினில் ஏற்க னவே 200-க்கும் அதிகமான பால் பொருட் கள் உள்ளன. சந்தையில் அவ்வப் போது என்னென்ன பொருட்கள் தேவைப்படுகிறதோ, அதற்கேற்ப புதிய  பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். பால் கூட்டுறவு சங்கங்கள் புதிதாக நிறைய திறக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த கிராமங்களில் கூட்டுறவு பால் சங்கங்கள் இல்லையோ, அங்கே தொடங்குவதற்கான உத்தரவு பிறப் பிக்கப்பட்டு, முழுவீச்சில் பணிகள் நடைபெறுகின்றன”. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். நோட்டீஸ் வழங்க உத்தரவு இதனிடையே, பால் பண்ணை கட்டுமானப் பணி கடந்தாண்டு ஏப்ரல்  மாதம் தொடங்கப்பட்டு, அதை 8  மாதங்களில் முடிக்க வேண்டிய நிலை யில், இன்னும் முடிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவது குறித்து ஆவின் நிறுவன உயர் அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், இது தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்குமாறு உயர் அலு வலர்களிடம் அமைச்சர் உத்தர விட்டார். ஆய்வின்போது, பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பி னர் எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பே ரவை உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீல மேகம், என்.அசோக்குமார் உள்ளிட் டோர் உடனிருந்தனர். பின்னர் ஆட்சியரகத்தில், மாவட் டத்தில் பால் உற்பத்தியை அதிகப் படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்று அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.