tamilnadu

ரூ. 50 ஆயிரம் எங்கே? மத்திய கூட்டுறவு வங்கி முற்றுகை

மதுரை, ஜூன் 11- கொரோனா பாதிப்பால் பல்வேறு தொழில்கள் பெரும் நெருக்கடியில் உள்ளன. சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்குவ தாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்திருந் தார். அதைத் தொடர்ந்து மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் பெறுவதற்கு மக்கள் மனுக் களுடன் குவிந்தனர். இந்தநிலையில் வியாழ னன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப் பகுதிக்குழு சார்பில் அப்பகுதி மக்கள், சிஐ டியு சாலையோர வியாபாரிகள் (சிஐடியு) சங்கம் சார்பில் மதுரை மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரேஷன் கார்டுகளுடன் ரூ.50 ஆயிரம் கடன் கேட்டு மனு அளித்தனர். மனுக் கொடுக்கும் போரா ட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப் பகுதிக்குழு செயலாளர் பி. ஜீவா, மாவட்டக் குழு உறுப்பினர் பி. கோபிநாத், மாமன்ற முன்னாள் உறுப்பினர் கே.விஜயா, பகுதிக்குழு உறுப் பினர்கள் இ.உதயநாதன், பி. ரசூல், வி.கே.எஸ். ராஜா, சிஐடியு மாவட்டத் தலைவர் மா.கணே சன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட பொதுச் செயலா ளர் எஸ். சந்தியாகு, எஸ்.எம். இக் பால், என்.செல்வம், எஸ்.ராதா கிருஷ்ணன், டி. பாக்கியம், ஜகா ங்கீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

தொடர்ந்து செய்தியாளர்களி டம் பேசிய சாலையோர வியாபாரி கள் சங்க மாவட்டப் பொதுச்செய லாளர் எஸ்.சந்தியாகு “வங்கி மேலாளரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம் அவர் கூறுகை யில் அமைச்சர் அறிவித்தது போல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.50,000 வழங்க முடியாது. சில விதிமுறை கள் உள்ளது. வங்கி மேலாளர் எங்களிடம் ஒரு சுற்றறிக்கை கொடுத்துள்ளார் அதிலுள்ள நிபந் தனைகளின்படி சாலையோர வியாபாரிகள் எப்போதுமே கடன் வாங்க முடியாது.  கூட்டுறவுத்துறை அமைச் சரோ, “ சாலையோர வியாபாரி கள் கடை வைத்துள்ள இடத்தில் மூன்று நபர்கள் ஒப்புதல் அளித் தால் வங்கியிலிருந்து கடன் வழங்குவார்கள் என்று கூறி யுள்ளார். மக்கள் பொருளாதார ரீதியாக, வறுமையால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குடும்ப அட்டைகளுக்கு ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு. இப் போது பல்வேறு நிபந்தனை களை கூறுகிறார்கள். கூட்டுறவுத் துறை அமைச்சர் அனைவருக் கும் வங்கிக் கடன் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் அறி விப்பு வெளியிட வேண்டுமென்றார்.