சென்னை, டிச. 1- அநியாய அபராத கட்டணத்தை ரத்து செய்யக்கோரி வியாழனன்று (டிச.1) எழும்பூரில் சாலை போக்கு வரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இதன் காரணமாக அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திருத்த சட்டத்தை தமிழக அர சும் அமல்படுத்தியுள்ளது. இதனால் மோட்டார் வாகனத்தை பயன்படுத்து வோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி னர். இந்நிலையில், பிடிக்கும் அதே இடத்தில் (ஸ்பாட் பைன்) அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும், காவல்துறை மானிய கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், அதிகப்படியான அபராத தொகையை குறைக்க வேண்டும், ஓட்டுநர்களை தரக்குறை வாக நடத்துவதை காவல்துறையினர் கைவிட வேண்டும், ஓலா, உபேர், போர்ட்டர் போன்ற ஃஆப் வாகனங் கள் அரசு கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 6 மாதத்திற்கு ஒருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், உரிமைக் குரல், உரிமை கரங்கள், சிகரம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சம்மேளனத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் ராயப்பன் தலை மையில் நடைபெற்ற இந்த போராட் டத்தில் சிஐடியு மாவட்டச் செய லாளர்கள் சி.திருவேட்டை (மத்திய சென்னை), பா.பாலகிருஷ்ணன் (தென்சென்னை), போக்குவரத்து சங்க நிர்வாகி எம்.சந்திரன், சம்மேள நிர்வாகிகள் எஸ்.கே.முருகேஷ், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து போக்கு வரத்து காவல்துறை இணை ஆணையர் கபில் சரட்கரை சம்மே ளனத் தலைவர் கே.ஆறுமுகநயினார், பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, நிர்வாகிகள் ம.உதயகுமார், கண்ணன் மற்றும் ஜாகிர் உசேன், சுரேந்தர் (உரிமைக்குரல்), வெற்றி வேல் (உரிமை கரங்கள்), கார்த்திக் (கால் டாக்சி) சந்தித்தனர். அப்போது, அபராத கட்டணம் 40 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப் பட்டுள்ளது.
பெருங்குற்றங்கள் அல்லாத, எவருக்கும் எவ்வித தீமையையும் ஏற்படுத்தாத சிறு சிறு குற்றங்களுக்குக் கூட 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படு கிறது. 500 ரூபாய் கூட உத்தரவாத மில்லா வருமானத்தை கொண்ட தொழிலாளிக்கு தினம் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகி றது. ஓட்டுநர்களை தரக்குறைவாக நடத்துவதோடு, தகாத வார்த்தை களையும் காவல்துறையினர் பயன் படுத்துகின்றனர். இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று தலை வர்கள் வலியுறுத்தி உள்ளனர். சங்கத் தலைவர்களின் கோரிக் கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை யினருக்கு உரிய அறிவுரைகள், வழி காட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் அதிகாரி தெரிவித்ததாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் வி.குப்புசாமி தெரிவித்தார்.