விருதுநகர், ஜூலை.18- விருதுநகர் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் வெற்றியடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவ காசி ஒன்றியத்திற்கு உட்பட்டது வெள்ளூர் கிராமம். இங்குள்ள முனி யாண்டி கோவில் முதல் கல்லுக் கடை பேருந்து நிறுத்தம் வரை, அம் மன் கோவில்பட்டி முதல் ஆர்சி சர்ச் வரை உள்ள சாலையை தரமான தார் சாலையாக மாற்றிட வேண்டு மென கடந்த ஓராண்டுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொது மக்களிடம் கையெ ழுத்து பெற்று ஒன்றிய அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது. பின்னர், மக்கள் சந்திப்பு பிரச் சார இயக்கம் நடைபெற்றது. இதை யடுத்து, மறியல் போராட்டம் அறி விக்கப்பட்டது. இதையொட்டி அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போட்டனர். இருந்த போதும், கோரிக்கைகளை நிறை வேற்ற அரசு தரப்பில் காலதாமதம் செய்யப்பட்டது. எனவே, சாலை அமைக்கக் கோரி, செவ்வாயன்று பி.டி.ஓ அலு வலகத்தில் ஆர்ப்பாட்டமும், ஜூலை 27 இல் சாலை மறியல் போராட்டமும் நடத்துவது என அறி விக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்த 100க்கும் மேற்பட்ட பெண் கள் வெள்ளூர் கிராமத்திலிருந்து புறப்படத் தயாராகினர். அப்போது, வெள்ளூருக்கு வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். முடி வில், 100 நாள்வேலைத் திட்டம் வியாழக்கிழமை முதல் நடை பெறும் எனவும். செவ்வாயன்றே ரூ.39 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி துவங்கப்படும் என உறுதியளித்தனர். அதன்படி, உடனடியாக அங்கு மண் அள்ளும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி தொடங் கப்பட்டது. இது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொடர் போராட் டத்திற்கு கிடைத்த வெற்றி என பொது மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். முன்னதாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்து வேலு, ஒன்றியக் குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.லட்சுமி, விவசாயத்தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் எம்.சுந்தர பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் மீனாட்சி சுந்தரி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னக்கருப் பன், புதிய தமிழகம் ஒன்றிய செயலா ளர் ஜெயராம், சமூக ஆர்வலர்கள் மாரியப்பன், சர்க்கரை, சீனி, குரு சாமி, பகத்சிங், பொன்ராம் தங்கேஸ் வரி, வீராச்சாமி, சங்கரி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.