tamilnadu

img

20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததால் எல் அன்ட் டி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

திருப்பூர், மார்ச் 22- மங்கலம் ஊராட்சியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி மங்கலம் ஊராட்சி மன் றத் தலைவர் மூர்த்தி தலைமையில் அந்த ஊராட்சி மக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், மங்கலம் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் திருப் பூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை நிர்வகிக்கும் எல் அன்ட் டி நிர்வா கம் கடந்த 22 தினங்களில் 10 லட் சத்து 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 22 நாட்கள் கடந்து 50 ஆயி ரம் லிட்டர் தண்ணீர் மட்டும் விநி யோகம் செய்யப்பட்டுள்ளது. இத னால் மங்கலம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் செவ்வாயன்று காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதன் காரணமாக திருப்பூர் மங்கலம் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல றிந்து சம்பவ இடத்துக்கு வந்த மங்க லம் காவல் துறையினர், ஊராட் சித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எல் அன்ட் டி நிர்வாகத் துடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தினங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.