tamilnadu

புதுவையில் தொடரும் மின் ஊழியர்கள் எழுச்சி!

புதுச்சேரி, பிப்.2- மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன் றிய பாஜக மற்றும் மாநில என்ஆர் காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசுகளின் முடிவை எதிர்த்து புதுச்சேரி மின்துறை ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் 2ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. யூனியன் பிரதேச அரசுகளின் கட்டுப்பாட் டில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மின்துறையை தனி யாருக்கு தாரைவார்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. புதுச் சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசுகளும், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மின்துறையை தனியாரிடம் ஒப்ப டைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.  ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் இம் முடிவை எதிர்த்தும், அரசின் கட்டுப்பாட்டி லேயே மின்துறை தொடரவேண்டும் என வலி யுறுத்தியும் புதுச்சேரியில் மின்துறை ஊழி யர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக,  மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிப்ரவரி 1 முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

போராட்டத்தை ஒடுக்க 144 தடை உத்தரவு

புதுச்சேரி மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள் ளார். அதேபோல், காரைக்கால் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு மற்றும் அதிகாரிகளின் மிரட்டலையும் மீறி ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இதனால் அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மின் ஊழியர்களின் போராட்டத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி  உள்ளிட்ட ஒன்றிய தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு, கேரளா மாநி லங்களைச் சேர்ந்த மின்சார வாரிய தொழிற்  சங்க தலைவர்கள் போராட்டத்தில்  பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்து பேசினர். இரண்டாவது நாள் போராட்டத்தில் தேசிய மின்சார வாரிய தொழிலாளர்-ஊழியர் மற்றும் பொறியாளர் அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக் குழுவின் அமைப்பாளரும் சிஐடியு அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான பிர சாந்த்நந்திரி சவுத்ரி, அகில இந்திய மின்சார வாரிய பொறியாளர் கூட்டமைப்புத் தலைவர் சைலேந்திரதுபே, கர்நாடக மாநில மின்சார வாரிய சம்மேளன நிர்வாகிகள் முகமதுசமி, அபின், சதீஷ், எஸ்சி, எஸ்டி கூட்டமைப்பு நிர்வாகிகள் குருலிங்கய்யா, ராஜ்குமார், கவிக்குமார், தமிழ்நாடு மின்சார பொறியாளர் சங்கத்தின் தலைவர் அருட்செல்வம் ,  பொதுச் செயலாளர் ஜெயந்தி ஆகியோரும் ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். அப்போது, “ புதுச்சேரி மின்துறையை ஒருபோதும் தனி யாரிடம் தாரைவார்க்க விடமாட்டோம்” என்றனர்.

இதேபோல்,  புதுச்சேரியிலுள்ள அரசு ஊழி யர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைமை யில் பொதுப்பணித்துறை, கல்வித்துறை, சுகா தாரத்துறை, அச்சகதுறை, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களும் ஆத ரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்

மாநிலங்கள்- அரசியல் கட்சிகள் ஆதரவு

புதுச்சேரி மின் ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஊழியர்சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழு தலைவர் அருள் மொழி தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மின் வாரிய சங்கங்களின் தலை வர்கள் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், கேரளா மின்வாரிய பொறியாளர் தொழிலாளர்  சங்கங்களின் தலை வர்கள் ஜெயபிரகாஷ், அரிலால், உண்ணி கிருஷ்ணன், விஜயன், சுரேஷ்குமார் உள் ளிட்டோர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து முதல் நாள் உரையாற்றினர். காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ (எம் எல்) மனித நேய மக்கள் கட்சி  மற்றும் சமூக ஜனநாயக இயக்கங்களும் மின் ஊழியர்களின்  போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதி களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 முதலமைச்சர்-தலைவர்கள் சந்திப்பு

புதுச்சேரி மின் துறையை தனியார் மய மாக்கும் ஒன்றிய, மாநில அரசுகளின் முடிவை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடி வுக்கு கொண்டுவர வேண்டியும் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில அமைப்பாளருமான சிவா, காங்கிரஸ் கட்சியின் பிரதேச தலை வர் சுப்பிரமணியன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் தேவ.பொழிலன் ஆகி யோர் சட்டப்பேரவையில்  முதல்வர் ரங்கசாமி யை சந்தித்து வலியுறுத்தினர்.