செல்வத்தில் சிறந்தது கேள்வி
செவியுணவே வாழ்வின் வேள்வி
கேள்வியில் சிறந்தவர் ஆன்றோர்
கேள்வியும் கல்வியும் கொண்டோர்!
கற்கா விட்டாலும் கேட்க!
கடிய துன்பத்தைப் போக்க
போற்றும் கேள்வியேபெருமை
பொருளை ஆராய்தல் அருமை!
எளிமை தெளிவுறச் சொல்லுக!
ஏற்ற கேள்வியால் வெல்லுக!
உலகத்தோ டொழுகல் அறியார்
உலகில் கல்லாச் சிறியார்!
அறிவினால் வருவதை அறிவார்
அஞ்சுதல் அஞ்சிடப் புரிவார்
வருவதை அறிவார்க்குத் துன்பம்
வராது செல்வமே இன்பம்!
கல்வியும் கேள்வியும் போற்று
கருத்தாய்க் கொள்ளாரைத் தூற்று
நல்லது கெட்டது அறிந்திடு
நாட்டு மக்களில் உயர்ந்திடு!