tamilnadu

img

நெருக்கடியில் உள்ள விசைத்தறி தொழிலுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிவாரணம் இல்லை

அவிநாசி, ஜூலை 26- நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விசைத்தறி தொழி லை மீட்பதற்கான எந்த அறி விப்பும் ஒன்றிய பட்ஜெட்டில் இல்லை என்று விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் விமர்சித்துள்ளது. சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி வஞ்சிபாளையம்  சிஐடியு அலுவலகத்தில் வியாழனன்று  நடைபெற் றது. மாநிலத் தலைவர் பி. முத்துசாமி தலைமை வகித் தார். மாநிலப் பொதுச் செய லாளர் எம்.சந்திரன், மாநில பொருளாளர் எம்.அசோகன் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை என்பது மக்களை ஏமாற்றி  உள்ளது. குறிப்பாக நாட்டு  மக்கள் வளர்ச்சிக்கு உண் டான நிதிநிலை அறிக்கை என்பது இல்லை, இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்  நாடு அரசை வஞ்சித்துள் ளது. சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு எந்த  வகையிலும் உதவாத பட்  ஜெட்டாக உள்ளது. விசைத் தறி தொழிலுக்கு மிகப் பெரிய நெருக்கடியான சூழ்  நிலை உள்ளது. நிதிநிலை  அறிக்கையில் நிவாரணம் கிடைக்கும் என்று உற்பத்தி யாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மோடி அரசாங்கம் மிகப்பெரிய ஏமாற்றம் செய்  துள்ளது. விசைத்தறி தொழி லாளர்கள் வேலையின்மை யால் பாதிக்கப்பட்டு, கடன்  வாங்கி அந்த சுமை தாங்க  முடியாமல் பலர் தற்கொலை செய்வது தொடர்கதையாக வருகிறது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையான கட்டண உயர்வு மற்றும் மின்  சார கட்டண உயர்வு என்பது  விசைத்தறி தொழிலில் தாங்க முடியாத நெருக்க டிக்கு தள்ளப்படும் என்பதை  மாநில அரசு உள்வாங்கிக்  கொள்ள வேண்டும். உடனடி யாக விசைத்தறிதொழிலை பாதுகாக்கவும் கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களையும் பாதுகாக்கவும் அறிவித்துள்ள அனைத்து  மின் கட்டண உயர்வுகளை யும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  விசைத்தறி தொழிலாளர்களுக்கு முன்பு  இன்சூரன்ஸ் திட்டத்தை அறி முகம் செய்து அதனுடைய பலன்களை நலன்களை பெற்றுக் கொண்டனர். அந்  தத் திட்டத்தை ஒன்றிய அரசு  நிறுத்தி உள்ளது. உடனடி யாக இன்சூரன்ஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும் என்று கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது.