புதுதில்லி, ஜூலை 9 - நாடு முழுவதுமுள்ள பழங்குடி யினரின் வாக்கு வங்கியை மனதிற் கொண்டே, குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவை பாஜக வேட்பாளராக நிறுத்தியி ருக்கிறது என்று சமூக செயற்பாட் டாளர் மேதா பட்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயி லாக அளித்துள்ள பேட்டியில் மேதா பட்கர் மேலும் கூறியிருப்பதாவது: மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் பழங்குடியினர் வாக்கு வங்கியில் பெரும்பங்கு வகிக்கிறார்கள் என்பது பாஜக-வுக்கு தெரியும். ஆகையால் அவர்கள் திரௌபதி முர்மு போன்ற பழங்குடி நபர்களை விரும்புகிறார்கள். அதற்காகவே பிர்சா முண்டா ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். வன உரிமைகளை வழங்காமல், காடுகளை கார்ப்பரேட் நிறுவனங்க ளிடம் ஒப்படைக்க திட்டமிடுபவர்க ளை பழங்குடி மக்களுக்கு ஆதர வானவர்கள் என்று கூற முடியாது.
பழங்குடியினர் மற்றும் தலித்துக் களின் நலன்களை பாதுகாக்க, குடி யரசு தலைவருக்கும் மட்டுமல்ல, ஆளுநருக்கும் அரசியல் சாசனத்தில் உரிமை உண்டு. பட்டியல் வகுப்பி னர், பழங்குடியினருக்கு எதிரான எந்த சட்டத்தையும் அவர் தடுக்க முடியும். ஆனால் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்டால் அவரால் அதைச் செய்ய முடியுமா? இந்தியாவைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவர் ஆளும் கட்சியின் ரப்பர் ஸ்டாம்பாக மாறுகிறார் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தல் கட்சி சார்பற்ற போட்டியாக இருந்தும், அரசியல் கட்சிகள் வேட்பா ளர்களை தேர்வு செய்வது துரதிஷ்ட வசமானது. யஷ்வந்த் சின்ஹாவின் பொருளாதார முன்னுதாரணம் என்ன செய்ய போகிறது? சொந்த கிராமத்தில் மின்சாரம் கிடைக்காத திரௌபதி முர்முவுக்கு என்ன அதி காரம் இருக்கும்? என்றெல்லாம் தெரியவில்லை. இவ்வாறு மேதா பட்கர் கூறியுள்ளார்.