திருப்பூர், செப்.24- எதிர்க்கட்சிகள் இணைந்து உரு வாக்கிய ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெற வைக்க உழைப்போம் என திருப்பூரில் நடைபெற்ற ஏஐடியுசி தேசிய பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்திந்திய தொழிற்சங்க பேராயத்தின் (ஏஐடியுசி) தேசிய பொதுக்குழு கூட்டம், திருப்பூரில் செப்.22 முதல் 24 ஆம் தேதி யன்று வரை நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு ஏஐடியுசி தலைவர் ரமேந்தர் குமார் தலைமை வகித்தார். திருப்பூர் துணை மேயர் எஸ்.பாலசுப்ரமணி யன், ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் வர வேற்றனர். சங்கத்தின் பொதுச்செய லாளர் அமர்ஜித் கவுர், அரசியல் மற்றும் செயல்பாட்டு அறிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார். பாஜகவின் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தால் இந்திய ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிர்கொள்கிறது. பொருளாதாரம் பின்னடைகிறது. மதச்சார்பின்மை, பன்மைத்துவம் ஆகியவை கடுமையான அச்சுறுத்த லுக்கு ஆளாகியுள்ளன.
பாஜகவின் முதலாளித்துவக் கொள்கைகளால் இந்திய தொழிலாளி வர்க்கம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான ஊழல், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, அதி கரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் மீதான குற்றங்கள் போன்றவை மோடி ஆட்சிக்காலத்தில் அதிகரித்துள்ளன. சிறுபான்மையினர், தலித்து கள், ஆதிவாசிகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் கூடிக்கொண்டே இருக்கின்றன. பாஜகவை தோற் கடிப்பதற்கும், மக்கள் மீதான முதலாளித்துவ தாக்குதலை எதிர்த்து நின்று முறியடிப்பதற்கும், விவசாயி கள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்று மை வெற்றிகரமாகக் கட்டமைக்கப் பட வேண்டும். மேலும், இந்திய உழைக்கும் மக்கள், தொழிற்சங்கங் கள் ஆகியவை வரும் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் அரசியல் பணியை மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும்” என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் ஏஐடியுசி செயல் தலைவர் பினோய் விஸ்வம் எம்.பி., துணைத்தலைவர் கே.சுப்பராயன் எம்.பி., உட்பட நாடு முழுவதும் இருந்து ஏராளமான ஏஐடியுசி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.