மதுரை, நவ. 23 - அரிட்டாபட்டி பகுதியில், டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அனுமதியை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட ஊரா ட்சி மன்ற கிராம சபைக் கூட்டங்களில் அதிரடியாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. மக்கள் கடும் எதிர்ப்பு மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி மற்றும் அதனையொட்டிய 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில்- இந்தியாவின் பெரு முதலாளிகளில் ஒருவரான அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்ப தற்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. 10 கிராம மக்களையே முற்றிலுமாக வெளியேற்றி விட்டு, தமிழக அரசால் பல்லுயிர் பாதுகாப்பு தலமாக அறிவிக்கப்பட்ட பகுதியை முற்றிலுமாக அழிக்கும் வகையிலான இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறை தீர் கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்த மக்கள், போராட் டங்களையும் அறிவித்துள்ளனர். சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத் திற்கு வழங்கப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை மக்க ளவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதி யுள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை யன்று உள்ளாட்சி தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களி லும் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
25 ஊராட்சிகளில் தீர்மானம்
குறிப்பாக, இத்திட்டம் அமைய வுள்ள அரிட்டாபட்டி ஊராட்சி மன்றம் துவங்கி மேலூர், கொட்டாம்பட்டி, கிழக்கு ஒன்றியங்களைச் சேர்ந்த அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, மாங்குளம், புலிப்பட்டி, எட்டிமங்க லம், வெள்ளரிப்பட்டி, கிடாரிப்பட்டி, ஆமூர், சென்னகரம்பட்டி, கம்பூர், கேசம்பட்டி, கருங்காலக்குடி, அய்யாபட்டி, கச்சிராயன்பட்டி, தும்பை பட்டி, யா. நரசிங்கம், அரும்பனூர், யா. கொடிக்குளம், சிட்டம்பட்டி, பனைக் குளம், தாமரைப்பட்டி, பூலாம்பட்டி, இடையபட்டி ஆகிய ஊராட்சிகளும், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திடியன் ஊராட்சி, கல்லுப் பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வன்னிவேலம்பட்டி ஊராட்சி உட்பட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளி லும் கிராமசபைக் கூட்டங்களில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சிவகங்கை மாவட்டம் கிருங்காகோட்டை ஊராட்சியிலும் தீர் மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்
“மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்திற்கான ஏல அறி விப்பை ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும்; தொல்லியல் சின்னங் களையும், பல்லுயிர்ப் பாதுகாப்பு சூழலையும் கொண்ட மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும்; வேதாந்தா டங்ஸ்டன் சிறப்புத் திட்டத்திற்கு எந்த அனுமதியும் தரக்கூடாது; மேலும் தமிழ்நாடு அரசு உடனடியாக சட்ட மன்றக் கூட்டத்தைக் கூட்டி சிறப்புத் தீர்மானம் இயற்றிட வேண்டும்; மேற் படி கனிமச் சுரங்கத்தை தமிழ்நாட்டில் அனுமதிப்பதில்லை என கொள்கை முடிவெடுத்து அரசு அறிவிக்க வேண்டும்” என்று தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தன. அமைச்சர் பி. மூர்த்தி உறுதி முன்னதாக, அரிட்டாபட்டியில் ஊராட்சி மன்றத் தலைவர் வீரம்மாள் (90 வயது) தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மேலூர் எம்எல்ஏ பெரிய புள்ளான், சோழவந்தான் எம்எல்ஏ ஏ.வெங்கடேசன், மேலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பொன்னு சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகா செயலாளர் ஏ. தனசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம். கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி. மூர்த்தி, “மக்கள் அச்சப்பட வேண்டாம், சுரங்கம் அமைக்க மக்களும் விட மாட்டீர்கள். தமிழ்நாடு அரசும் அனுமதிக்காது என்றார்”.