tamilnadu

முதுகலைப் படிப்பில் இட ஒதுக்கீடு- ஊக்க மதிப்பெண் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு இரண்டுமே வழங்க தடையில்லை

சென்னை,ஜன.27- கிராமப்புறங்களில் பணிபுரியக் கூடிய  அரசு மருத்துவர்களுக்கு முது கலைப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் ஆகிய  இரண்டுமே வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, எம் டி, எம்  எஸ் போன்ற  மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடும், 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்று 2021  அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.  இதை எதிர்த்து தனியார் மருத்து வர் பார்க்கவியான்  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை தனி நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நடை பெற்றது. அப்போது தமிழக அரசு  மற்றும் அரசு மருத்துவர் சார்பில்  ஊக்க மதிப்பெண்ணை தகுதி யாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்து வர்கள், கிராமப்புறங்களில், மலைப் பகுதி அணுக முடியாத பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  பணிபுரிவதாகவும், இதனால் பொது மக்கள் தான் பயன்பெறுவதாகவும் தெரிவித்தனர்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம். தண்ட பாணி, கிராமப்புற மருத்துவமனை களில் பணிபுரியும் அரசு மருத்து வர்களுக்கு இரண்டு சலுகைகளும் வழங்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்க தடை இல்லை என்றும் குறிப்பிட்டார். தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் பார்க்கவியான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு நீதிபதி கள் பரேஷ் உபத்யாய் மற்றும் சத்திக் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரிக்கப் பட்டது.

இந்த மேல்முறையீடு மனுவில் ஜனவரி 27 அன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை யில் பொதுப் பிரிவினருக்குக்கான 50 சதவீத ஒதுக்கீட்டில் அரசு மருத்து வர்கள், 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம்  என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தனர்.  நடப்பு கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.  இட ஒதுக்கீடு மற்றும் வெயிட் டேஜ் மதிப்பெண் வழங்கும் தமிழக அரசு முடிவை எதிர்த்து எதிர் காலத்தில் வழக்கு தொடரலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.